ADVERTISEMENT

விரைவில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்... 

06:15 PM Sep 09, 2019 | santhoshkumar

தமிழ் எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுப்பது மணிரத்னத்தின் கனவு. பல வருடங்களாக இந்த படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் தள்ளிப் போய்விடுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்தும், பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களை வைத்தும் ‘பொன்னியின் செல்வன்’படத்தை இயக்க மணிரத்னம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க இருக்கிறது என்று செய்திகள் வெளியாகின.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி ஆகியோர் நடிக்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தனது பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். இவரை அடுத்து த்ரிஷாவும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்து வருகின்றது.

ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்க, வைரமுத்து 12 பாடல்கள் எழுத இருக்கிறாராம். இந்தியாவின் முக்கிய ஒளிப்பதிவாளராக இருக்கும் ரவிவர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். வருகிற டிசம்பர் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் படக்குழு குறித்த மொத்த அறிவிப்பையும் அப்போதுதான் வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT