வெளியானது ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்!

Mani Ratnam

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கிஎழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பிற்காக படக்குழு ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளது.

alt="kalathil santhipom" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="af8b86e3-13cd-4e7c-ac60-63d5477e73e4" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/kalathil-santhipom-500x300-article-inside_49.jpg" />

இந்த நிலையில், படப்பிடிப்புத்தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடனக் கலைஞர் பிருந்தா கோபால், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இயக்குநர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருடன் இணைந்து இப்படத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

alt="trip" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f776a3a2-bb2c-407a-bbdd-194e36a79df8" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Trip_15.jpg" />

maniratnam ponniyin selvan
இதையும் படியுங்கள்
Subscribe