Advertisment

ஷூட்டிங்குக்கு கிளம்பிய 'பொன்னியின் செல்வன்' டீம்! வைரலாகும் போட்டோ!

fgegrhes

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுவரும் இப்படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

Advertisment

ரூ. 800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புஇதுவரை 70 சதவீதம் முடிந்துள்ள நிலையில், இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இந்த மாதம் ஜெய்ப்பூரில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது அங்கு கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருவதால், இப்படத்தின் படப்பிடிப்பை மத்திய பிரதேசத்தில் நடத்தவுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இதற்காக இயக்குநர் மணிரத்னம், பிரகாஷ் ராஜ், நடிகர் கார்த்தி ஆகியோர் குவாலியர் விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஓர்ச்சா என்ற இடத்தில் அமைந்துள்ள படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றுள்ளனர். இவர்கள் விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Advertisment

ponniyin selvan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe