ADVERTISEMENT

‘பொன்னியின் செல்வன்’.. ஆன்லைனில் காத்திருந்த அதிர்ச்சி - புலம்பும் ரசிகர்கள்

11:24 AM Sep 30, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் இன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு திரையரங்கம் ஹவுஸ்புல்லாகியுள்ளது. இதனிடையே படத்திற்கான டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக ரசிகர்கள் பலரும் குறை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை பயன்படுத்தி மோசடி ஒன்று நடந்துள்ளது. அதில் பொன்னியின் செல்வன் படம் டெலிகிராமில் வெளியாகியுள்ளதாக தகவல் கிடைக்க, படத்தின் மீதான எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் பலர் டெலிகிராம் பக்கம் குவிய தொடங்கியுள்ளன. அந்த டெலிகிராம் லிங்கில் படம் இருப்பதாக செயலி காண்பிக்க, படத்தை பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் லிங்கை க்ளிக் செய்துள்ளனர். குறிப்பிட்ட தொகையை கட்டணமாகச் செலுத்தினால் உடனே படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து பலரும் ஆன்லைன் வழியாக பணத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் பணத்தை செலுத்திய பல மணி நேரமாகியும் படம் வராமல் லோடிங் என்று வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT