பொன்னியின் செல்வன் படத்தில் யார் யார் பணிபுரிகிறார்கள், நடிகின்றனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

maniratnam

இயக்குனர் மணிரத்னத்தின் நீண்டநாள் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை கடந்த 10ஆம் தேதி தாய்லாந்தில் ஷூட்டிங் தொடங்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஒரு வருடங்களாக இந்த படம் குறித்த பல தகவல்கள் வெளியாகின. ஆனால், படக்குழு இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் தெரிவிக்காமல் மௌனம் காத்தனர்.

Advertisment

இந்நிலையில் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, 'ஜெயம்' ரவி, விக்ரம் பிரபு, ரகுமான், ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஆர்.சரத்குமார், பிரபு, ஜெயராம், அஸ்வின் காக்குமனு , கிஷோர் மற்றும் பலர் நடிக்கின்றனர் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் சுபாஸ்கரனின் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் திரைக்கதையை மணிரத்னமும் குமரவேலும் இணைந்து எழுதியுள்ளனர். இந்த படத்திற்கான வசனத்தை ஜெயமோகன் எழுத, இசையை ஏ.ஆர். ரகுமான் அமைக்க, ஒளிப்பதிவை ரவிவர்மன் மேற்கொள்கிறார்.

Advertisment

“இங்கு முதல் கட்ட படப்பிடிப்பு ஒரு மாதங்களுக்கு மேல் நடைபெறும். அதற்காக கார்த்தி, 'ஜெயம்' ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் சென்றிருக்கிறார்கள். இதற்கு பிறகு ஒருவர் பின் ஒருவராக மற்ற நட்சத்திரங்களும் இணைந்து கொள்வார்கள். முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெறும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.