Skip to main content

"வீடியோ காலில் இளவரசியிடம் பேசி விடுகிறேன்" - வந்தியத்தேவன் பதில்

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

ponniyin selvan karthi reply to vikram tweet

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கியுள்ளதால் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கார்த்தி, திரிஷா உள்ளிட்டோர் படத்தின் கதாபாத்திரங்களை குறிப்பிட்டு கலாய்த்து ஜாலியாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

 

அந்த வகையில் விக்ரம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், "சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டுத் திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா,வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா" என ஜாலியாக குறிப்பிட்டிருந்தார். 

 

இந்நிலையில் கார்த்தி, விக்ரமின் பதிவிற்கு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், " இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. நான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புகிறேன். வீடியோ காலில் இளவரசியிடம் பேசி மன்னிப்பு சொல்லி விடுகிறேன். தயவு செய்து மன்னிக்கவும்." என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார். இவர்களின் இந்த உரையாடல் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்