Skip to main content

அஜித் 'நண்பா' என்றார்... விஜய் 'அண்ணா' என்றார்... - 'அவுட்டு' பவன் ஃப்ளாஷ்பேக்  

Published on 15/10/2018 | Edited on 15/10/2018

'அவுட்டு'... பொல்லாதவன் படம் பார்த்த அனைவரது நினைவில் இருந்தும் நீங்காத பெயர். படத்தில் தனுஷுக்கு அடுத்து கிஷோரும் அவருக்கு அடுத்து பவனும்தான் நடிப்பில் முன் நின்றனர்.
 

pawan



ஒரு தாதாவின் அடியாள் என்றாலும் கெத்தான, விசுவாசமான அடியாளாக ரசிகர்களைக் கவர்ந்தவர் 'அவுட்டு' என்கிற பவன். பத்து வருடங்களாகியும் இன்னும் மறக்காமல் இருக்கிறது. இப்பொழுது மீண்டும் அதே கூட்டணியில் 'வடசென்னை' வெளிவரவிருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு வரிசையில் பவனும் இருக்கிறார். நக்கீரன் ஸ்டுடியோ யூ-ட்யூப் சானலுக்கு அவர் அளித்த பேட்டியில் அஜித், விஜய் இருவருடன் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்தார்.

 

vadachennai



"ராசி படம் நடிக்கும்போதே எனக்கும் அஜித்துக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. அதன்பின் சிறிது காலம் கழித்து 'ஜி' படத்தில் நடிக்கும்போது, லிங்குசாமி சார் அஜித்திடம் 'படத்தின் வில்லனை பார்க்கிறீர்களா' என்று கேட்டிருக்கிறார். அஜித் 'சரி' என்றதும் பவன் எங்கே என்று என்னைத் தேடினார்கள். பிறகு நான் அஜித் முன்னால் நின்றேன். என்னை பார்த்ததும் 'நாங்க ரெண்டு பேரும் ஏற்கனவே ஒன்னா நடிச்சு இருக்கோமே, நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாச்சே' என்று சொன்னார். எனக்கோ எப்பொழுதோ நடித்தோம் இன்றுவரை நினைவில் வைத்திருக்கிறாரே என்று ஆச்சரியமாக இருந்தது. அந்த ஆச்சரியம் குறைவதற்குள் 'உங்கள் பெயர் வேறல்ல?' என்றார். 'ஆமா.. என் பெயர் சுரேஷ். சினிமாவுக்காக பவன் என்று மாற்றியிருக்கிறேன்' என்றேன். அஜித்தும் நானும் நிறைய பேசியிருக்கிறோம். நல்ல மனிதர் அவர்.

'குருவி' படத்தில் விஜய் சார் கூட நடித்தேன். அவர் 'பொல்லாதவன்' படம் பார்த்துட்டு வந்திருந்தார். 'செமயா பண்ணிருக்கீங்க, ஆக்டிங் கிளாஸ் ஏதும் போறிங்களா' என்றார். 'அதுலாம் எதுவும் இல்லை சார், சும்மா அப்படியே நடித்ததுதான்' என்றேன். 'இல்லன்னா செமயா பண்ணிருக்கீங்கன்னா' என்று சொல்லி புகழ்ந்து தள்ளினார். அதற்கும் ஒரு மனம் வேணும்ல?"    

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக முதல்வர் பிரச்சாரம்! (படங்கள்)

Published on 16/04/2024 | Edited on 16/04/2024

 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநிலத் தலைவர்கள் முதல் தேசியத் தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர். 

அந்த வகையில், திமுக வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதி ஜி. கே.எம். காலனி, பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது,  கால்பந்து விளையாட்டு வீரர்களிடம் வாக்களிக்கும்படி, கேட்டுக் கொண்டார்.

Next Story

வடசென்னை தொகுதியில் வேட்பாளரை ஆதரித்து அதிமுகவினர் பைக் பிரச்சாரம்!(படங்கள்)

Published on 13/04/2024 | Edited on 13/04/2024

 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வடசென்னை அதிமுக வேட்பாளர் மனோவை ஆதரித்து அக்கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று, வடசென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.நகரில்  திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை வாக்காளர்களுக்கு உணர்த்தும் வகையில் தேர்தல் பொறுப்பாளரும் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் 600 பெண்கள் கருப்பு புடவை அணிந்து  ஜெயலலிதாவின் முகம் பதித்த போட்டோவை முகத்தில் அணிந்தபடி பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது, விலைவாசி உயர்வைப் பட்டியலிட்ட பதாகைகளுடன் அரிசி, பருப்பு, பூண்டு உள்ளிட்ட மளிகை பொருட்களை கழுத்தில் மாலையாக தொங்கவிட்டபடி இ.பி.எஸ் போட்டோ ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனங்களில்  இரு பெண்கள் அமர்ந்து கையில் அ.தி.மு.க. கட்சி நிறம் கொண்ட பலூன்களுடன் பேரணியாக  வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து தொகுதி முழுக்க தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. 

பேரணி  ஊர்வலமானது 47 - வது வட்டம் கொருக்குப்பேட்டை சி.பி.ரோடு ஹரிநாராயணபுரத்தில் தொடங்கப்பட்டு, கிளாஸ் பாக்டரி,  கே.எச்.சாலை இ.எச்.ரோடு வைத்தியநாதன் மேம்பாலம், இளைய முதலிதெரு, வ.உ.சி நகர் மெயின் ரோடு, மார்கெட் தெரு, சேனியம்மன் கோவில் தெரு, ஜீவாநகர், எல்.ஐ.ஜி.காலனி, ஏ.இ.கோவில் தெரு, தியாகி பெருமாள் தெரு, டி எச் ரோடு, வீரராகவன் தெரு, எஸ்.என்.செட்டி தெரு, ஜீவரத்தினம் சாலை, வரதராஜ பெருமாள் கோவில், இரட்டைக் குழி தெரு, ராதாகிருஷ்ணன் நகர், தியாகப்பத்தெரு, மண்ணப்ப முதலி தெரு ஆகிய முக்கிய வீதிகளில் பயணித்து பேரணிப் பிரச்சாரத்தை முடித்துவைத்தனர்.