Skip to main content

'கழுகு 2' படப்பிடிப்பு தளத்தை சுற்றிவளைத்த அதிரடிப்படை போலீசார்.

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
kazhugu 2

 

 

 

மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளும், நக்சல்களும் ஆயுத பயிற்சி எடுப்பதும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருவது வாடிக்கையாகும். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடித்துவரும் 'கழுகு 2' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தனியாருக்கு சொந்தமான இந்த இடத்தை சுற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காடு உள்ளது. இந்த படத்தில் செந்நாய்களை கிருஷ்ணா வேட்டையாடும் காட்சி இடம் பெறுகிறது. ஆகாயத்தில் பறந்தவாறு செந்நாய்களை குறி தவறாமல் கிருஷ்ணா சுட வேண்டும். இதற்காக அடர்ந்த காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா ஒரிஜினல் துப்பாக்கியை வைத்து துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுத்து கொண்டிருந்தார்.

 

 

 

அப்போது தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் பீதியான மக்கள் மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி மேற்கொள்வதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அந்த பகுதிக்கு விரைந்த அதிரடிப் படையினர் துப்பாக்கி முனையில் நடிகர் கிரிஷ்ணாவையும், அவரது உதவியாளர்களையும் சுற்றி வளைத்தனர். பிறகு அருகில் சென்று பார்த்த போது தான், அது திரைப்படத்திற்கான ஒத்திகை என்பது அவர்களுக்கு தெரிய வந்தது, இருப்பினும் துப்பாக்கியை ஆய்வு செய்த காவல்துறையினர், அது ஒரிஜினல் துப்பாக்கி என்றும், லைசென்சை காண்பித்து விட்டு துப்பாக்கியை பெற்று செல்லுமாறும் கூறியுள்ளனர். இந்த துப்பாக்கிகள் சென்னையைச் சார்ந்த 'கன்' ராஜ் என்பவருக்கு சொந்தமானது. இதையடுத்து 'கன்' ராஜ் துப்பாக்கிகளுக்கான லைசென்சை எடுத்துக்கொண்டு கைப்பற்றப்பட்ட தன் துப்பாக்கிகளை மீட்க கேரளா விரைந்துள்ளார் 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

வரலாற்று படம் உண்டு...அஜித் படம் உண்டு..! - விஷ்ணுவர்தன் பிளானை சொன்ன கிருஷ்ணா #Exclusive 

Published on 01/08/2019 | Edited on 01/08/2019
Krishna

 

 

கிருஷ்ணா - பிந்து மாதவி இணைந்து நடித்து வெற்றிபெற்ற 'கழுகு' படத்தின் இரண்டாம் பாகமான 'கழுகு 2' படம் இன்று வெளியான நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் கிருஷ்ணா நக்கீரனுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் விஷ்ணுவர்தன் - அஜித் கூட்டணி படம் குறித்து பேசியபோது....''விஷ்ணுவர்தன் தற்போது ஒரு ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பு முடிய இன்னும் 6 முதல் 8 மாதங்கள் ஆகும். அண்ணனுக்கு வரலாற்று படம் இயக்கவும், அஜித்துடன் சேர்ந்து படம் பண்ணவும் ஆசை இருக்கிறது. ஆனால் இவை இரண்டும் ஒரே படத்தில் நடக்குமா என்றால் அது எனக்கு தெரியாது. ஏனென்றால் நாங்கள் இருவரும் சினிமாவை பற்றி வீட்டிலும், வெளியிலும் பேசிக்கொளவதில்லை'' என்றார்.