Skip to main content

எச்சரிக்கை விடுத்த ரசிகர்கள்... புனித் ராஜ்குமார் குடும்ப மருத்துவருக்கு போலீஸ் பாதுகாப்பு!

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

police protection for puneet rajkumar's family doctor

 

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த மாதம் 29ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்திய திரைப் பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

 

இந்நிலையில், நடிகர் புனித் ராஜ்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டுவருகிறது. இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் இருவர் புனித் ராஜ்குமாருக்கு முறையாக மருத்துவம் பார்க்கவில்லை எனக் கூறி அவரது குடும்ப மருத்துவர் ரமணராவ் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கர்நாடக மாநிலத்தில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து, மருத்துவர் ரமணராவ் வீடு மற்றும் மருத்துவமனைக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புனித் ராஜ்குமார் பெயரில் கோரிக்கை - நிறைவேற்றிய அரசாங்கம்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

as per request by people Karnataka CM named a road Puneeth Rajkumar

 

கன்னட சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கன்னட திரையுலகம் மட்டுமல்லாது இந்திய திரையுலகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் ஏழைகளுக்கு அவர் செய்த பங்களிப்பையும் போற்றும் விதமாக கர்நாடக அரசாங்கம்  கர்நாடக ரத்னா விருது வழங்கியது.

 

இதனிடையே புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிறகு சாலைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் மைசூர் சாலையில் உள்ள நாயண்டஹள்ளி சந்திப்பு மற்றும் பன்னர்கட்டா சாலையில் உள்ள வேகா சிட்டி மால் இடையேயான 12 கி.மீ. தூர சாலைக்கு புனித் ராஜ்குமாரின் பெயரை சூட்டியுள்ளது.

 

இந்த நிகழ்வில் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் மற்றும் அஸ்வினி புனித் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு அஸ்வினி புனித் ராஜ்குமார் சமூக ஊடகங்கள் வாயிலாக கர்நாடக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். புனித் ராஜ்குமாரை பல்வேறு வழிகளில் வாழ வைத்ததற்காக மாநில அரசு, கர்நாடகா ஃபிலிம் சேம்பர், திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் கடன்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

 

 

Next Story

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் விழா - கர்நாடக அரசு ரஜினிகாந்திற்கு அழைப்பு

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

Karnataka govt invites Rajinikanth, Jr NTR for Puneeth event

 

கன்னட சினிமா உலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வருடம் இன்றைய தேதியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கன்னட திரையுலகம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. திரைத்துறையில் தனது நடிப்பால் பல்வேறு விருதுகளைப் பெற்றதோடு சமுதாயத்திலும் கண்தானம், இலவச பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல உதவிகளைச் செய்து நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாகவே இருந்து வந்தார். திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் ஏழைகளுக்கு அவர் செய்த பங்களிப்பையும் போற்றும் விதமாக மைசூர் பல்கலைக்கழகம் புனித் ராஜ்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம்  வழங்கியது. 

 

இதனைத் தொடர்ந்து மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னதாக அறிவித்திருந்தார். கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1 ஆம் தேதி புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கி அம்மாநில அரசு கௌரவப்படுத்தவுள்ளது. இந்நிலையில், இந்த விருது வழங்கும் விழா கர்நாடக சட்டசபையான விதான சவுதாவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த விருதினை வழங்குவதற்காக ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தார்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 

 

புனித் ராஜ்குமார் மறைந்து இன்றுடன் (29.10.2022) ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அவர் கடைசியாக நடித்த 'கந்தாட குடி' படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் காடு மற்றும் நாட்டை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இயற்கை பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு படமாகும். மேலும் இப்படம் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் நிறைந்த ஒரு ஆவணப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.