pm modi wishes rakul preet singh

தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். கடைசியாக அயலான் படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தமிழைத் தாண்டி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வந்த இவர், இந்தி தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜாக்கி பாக்னானி என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

Advertisment

இருவரின் காதலுக்கும் அவர்களது வீட்டில் சம்மதம் தெரிவிக்க, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணம் காலையில் சீக்கிய முறைப்படியும் மாலையில் இந்து முறைப்படியும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நிகழ்வில் இருவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்‌ஷய் குமார், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட சில பாலிவுட் திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த நிலையில் ரகுல் ப்ரீத் சிங், பிரதமர் மோடி தங்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் அனுப்பிய வாழ்த்து கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் வாழ்த்து கடிதத்தில், “நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் வாழ்நாள் முழுவதும் வாழத் தொடங்கும் ஜாக்கியும் ரகுலுக்கும் எனது மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள். இனி வரும் வருடங்கள் தம்பதியர் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகும். தம்பதியரின் மனம் மற்றும் செயல்கள் ஒன்றாக இருக்கட்டும். எப்பொழுதும் அருகருகே இருந்துகொண்டு, தங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் நனவாக்கும் முயற்சியில் ஒருவரையொருவர் கைகோர்த்து, சிந்தனையோடும் அன்போடும் பொறுப்புகளை ஏற்று, வாழ்க்கைப் பயணத்தில் சரியான தம்பதிகளாக இருக்கட்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment