கமல் தொகுத்து வழங்கி கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் சமீபத்தில் ஆரம்பமாகி நடந்து வருகிறது. முதல் சீசனைப் போலவே இந்த சீசனும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இம்முறை நிகழ்ச்சியில் புதியதாக 16 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு...யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மும்தாஜ், தாடி பாலாஜி, நித்யா, ஜனனி ஐயர், மமதி சாரி, ஆனந்த் வைத்தியநாதன், சென்ட்ராயன், மகத், ஐஸ்வர்யா தத்தா, டேனியல் ஆனி போப், ரித்விகா, ஷாரிக் கான், ரம்யா, வைஷ்ணவி ஆகியோர் புதிதாக பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் சென்ற ஆண்டு வெளியானபோதே இந்த நிகழ்ச்சி பெரும்பாலான வீடுகளை ஆக்கிரமித்தது. குறிப்பாக சீரியல் பார்க்கும் பெண்மணிகளையும் ஈர்த்து டி.ஆர்.பி யில் தமிழின் முன்னணி சேனல்களை காலி செய்தது. அதுபோக தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன், தமிழ் யோகி போன்ற பைரஸி இணையத்தளங்களும் இந்நிகழ்ச்சியை தினமும் பிரத்தியோகமாக வெளியிட்டன. இதனால் இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. மக்களும் தேவை படும் நேரத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பைரஸி இணையதளங்கள் தற்போது வெளியிட்டு வருகின்றன. இதை தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பதிவிறக்கம் செய்து பார்த்து வருகின்றனர்.
பிக்பாஸையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ் !
சார்ந்த செய்திகள்
Next Story
சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
'அந்த குடிகாரனை வெட்டி எறிந்துவிட்டேன்' - பிரபல நடிகை புலம்பல்
பிக்பாஸ் மற்றும் நாகினி தொடரில் நடித்து பிரபலமான ஹிந்தி நடிகை ஸ்வேதா திவாரி முதல் கணவர் ராஜா சவுத்திரியை விவாகரத்து செய்து பிரிந்த பிறகு நடிகர் அபினவ் கோலியை காதலித்து 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் தன் இரண்டாவது கணவருடனும் தற்போது ஸ்வேதாவிற்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
அபினவ் கோலி மது போதையில் தினமும் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக ஸ்வேதா திவாரி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் அவரை கைது செய்த நிலையில் நடிகை ஸ்வேதா திவாரி சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசியபோது... ''கணவரை பிரிந்த பிறகு தற்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். எனது வாழ்க்கை ஒரு குடிகார விஷக்கிருமியிடம் சிக்கி இருந்தது. அந்த குடிகார விஷக்கிருமி என்னை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தது. இப்போது குடிகார விஷக்கிருமியை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எறிந்து விட்டேன். பெண்கள் தங்கள் பிரச்சினையை வெளியே சொல்ல பயப்படக்கூடாது'' என்றார்.