Skip to main content

"மீண்டும் நிர்வாணமாக நடிக்க வேண்டும்" - ரன்வீர் சிங்கிற்கு பீட்டா நிறுவனம் அழைப்பு

Published on 05/08/2022 | Edited on 05/08/2022

 

peta Company invites Ranveer Singh to act his ad

 

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் ரன்வீர் சிங் தற்போது 'சர்க்கஸ்' மற்றும் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் நடித்து வருகிறார். அதோடு ஃபேஷன் மற்றும் மாடலிங்கிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ரன்வீர் சிங். அந்த வகையில் சமீபத்தில் ஒரு மேகசின் அட்டை படத்திற்காக ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இவரது இந்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியது, இது தொடர்பாக அவர் மீது காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது. மேலும் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் ரன்வீர் சிங்கிற்கு எதிராக நூதன முறையில் சிலர் போராட்டமும் நடத்தினர். இப்படி பலதரப்பிடம் இருந்த எதிர்ப்பு கிளம்ப சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் ரன்வீர் சிங்கிடம் பீட்டா அமைப்பு தங்கள் 'ட்ரை வேகன்' பிரச்சாரத்துக்காக மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்கும்படி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பீட்டா அமைப்பு வெளியிட்டுள்ள அழைப்பு கடிதத்தில், "பீட்டா இந்திய அமைப்பு சார்பாக வாழ்த்துக்கள். சமீபத்தில் உங்கள் ஃபோட்டோஷூட்டை பார்த்தோம். எனவே எங்கள் அமைப்பு, 'அனைத்து விலங்குகளும் ஒரே பாகங்களைக் கொண்டவை' என்ற கோஷத்துடன் நடத்தும் பிரச்சார விளம்பர படத்தில் நிர்வாணமாக நடிக்க பரிசீலிப்பீர்களா" என கேட்டுள்ளனர்.

 

ஏற்கனவே பீட்டா அமைப்பு இதே கோஷத்துடன் நடத்திய பிரச்சார விளம்பரத்தில் அமெரிக்க நடிகையும் மாடலுமான பமீலா ஆண்டர்சன் அரை நிர்வாணமாக நடித்துள்ளார். இந்த தகவலையும் அந்த அழைப்பு கடிதத்தில் பீட்டா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த கடிதம் குறித்து ரன்வீர் சிங் விரைவில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பீட்டா அமைப்புடன் கூட்டணி - கோயிலுக்கு பிரம்மாண்ட பரிசு வழங்கிய பிரியாமணி

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Priyamani donate mechanical elephant to Kerala temple with peta

இந்தி, தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாகவுள்ளார் பிரியாமணி. கடந்த மாதம் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 370 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது மைதான், கன்னடத்தில் கைமாரா மற்றும் தமிழில் கொட்டேஷன் கேங் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Priyamani donate mechanical elephant to Kerala temple with peta

இந்த நிலையில், பீட்டா அமைப்புடன் இணைந்து இயந்திர யானையை கோவிலுக்குப் பரிசாக வழங்கியுள்ளார் பிரியாமணி. கோவில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் விதமாக இயந்திர யானைகளை கோவில்களில் இடம்பெறச் செய்யும் புதிய திட்டத்தை பீட்டா அமைப்பு முன்னெடுத்து வருகிறது. இந்த முன்னெடுப்பில் அவர்களுடன் கைகோர்த்த பிரியாமணி, கேரளா கொச்சி அருகே உள்ள திருக்கயில் மகாதேவா கோவிலுக்கு, இயந்திர யானையை பரிசாக வழங்கி மகிழ்ந்துள்ளார். இந்த கோயிலில் யானைகளை சொந்தமாக வைத்திருக்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ கூடாது என்ற முடிவை பின்பற்றி வருகிறார்கள். இயந்திர யானைக்கு மகாதேவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது இயந்திர யானை இதுவாகும்.

இது குறித்துப் பேசிய அவர், “தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் என்பது விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் நமது வளமான கலாச்சார நடைமுறைகளையும் பாரம்பரியத்தையும் பராமரிக்க முடியும்” என்றுள்ளார்.

Next Story

முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கும் முன்னணி பாலிவுட் நடிகர்

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
ranveer sing in thalaivar 171

ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இதனிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

இப்படத்தை தொடர்ந்து 171வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் அவரிடம் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து  ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார்.