perarasu

யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகர் மெட்ரோ சிரிஷ் ஆகிய இருவரும் பதிவிட்டிருந்த ட்விட்டர் புகைப்படம் பெரும் விவாதமாக மாறியுள்ளது. டி-ஷர்ட்டில் இருந்த வசனம்தான் அந்த விவாதத்திற்கு பெரும் காரணமாக அமைந்தது.

Advertisment

இதனை தொடர்ந்து பலரும் இந்தி திணிப்புக்கு எதிராக இந்தி தெரியாது போடா என்ற வசனத்தை ட்ரெண்ட் செய்து வந்தனர். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவிக்க, இன்னொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் இயக்குனர் பேரரசு இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “நீங்கள் இந்தி படிக்காததால் இந்தி அழிந்துவிடப் போவதில்லை! உங்கள் சந்ததி தமிழ் படிக்கவில்லை என்றால் தமிழ் அழிந்துவிடும்! உங்களுக்கு உண்மையான தமிழ்ப்பற்று உண்டென்றால் தனியார் பள்ளிகளில் கட்டாய தமிழ்ப் பாடத்திற்கு போராடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.