Advertisment

இப்பொழுதும் நிதி என்றால் நாங்கள்தான் தருகிறோம்! நீங்களா தருகிறீர்கள்?? - பேரரசு ஆவேசம்! 

bgdgfhf

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் எனத் தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழக அரசுக்குப் பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்குத் தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவுக்கு நிதியுதவி அளித்துவருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகுமார், சூர்யா குடும்பம் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்த சிவகுமார் குடும்பம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை அவரிடம் வழங்கினார்கள். இந்நிலையில் இதுகுறித்து ட்வீட் செய்துள்ள இயக்குனர் பேரரசு, "இப்பொழுதும் நிதி என்றால் சினிமாக்காரர்கள்தான் அள்ளித் தருகின்றனர்! அரசியலில் கோடிக்கோடியாய் சம்பாதித்த எத்தனையோ அரசியல்வாதிகள் இருக்கிறார்களே அவர்கள் கொடுக்கலாமே! ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அவர்கள் மக்கள் உயிரைக்காக்க பணம் கொடுக்கலாமே!" என பதிவிட்டுள்ளார்.

Advertisment

directorperarasu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe