Skip to main content

பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல மலையாள நடிகை!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

Parvathy Thiruvothu

 

கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் மீது சமீபத்தில் பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். தொடக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துவந்த வேடன், எதிர்ப்புகள் வலுத்த நிலையில், தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவை வெளியிட்ட வேடன், அதன் வாயிலாக அனைவரிடமும் மன்னிப்பு கோரினார். பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் வேடனின் இத்தகைய மன்னிப்பு கேட்கும் முறையைக் கடுமையாக விமர்சித்தனர்.

 

இந்த நிலையில், பிரபல மலையாள நடிகை பார்வதி திருவோத்து, வேடனின் அப்பதிவிற்கு லைக் செய்திருந்தார். அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த ரசிகர்கள், பார்வதியின் செயல் பாலியல் குற்றச்சாட்டிற்குள்ளான ஒருவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உள்ளது எனக் கண்டனங்களைப் பதிவுசெய்தனர். நடிகை பார்வதியின் செயலுக்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

 

அதில், "குற்றம்சாட்டப்பட்ட பாடகர் வேடனுக்கு எதிராக தைரியமாகப் பேசவந்த பாதிக்கப்பட்டவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். பல ஆண்கள் தன் தவறை ஒப்புக்கொள்ளக்கூட யோசிக்கும் நிலையில் அவரது அந்த மன்னிப்பு பதிவை நான் லைக் செய்திருந்தேன். ஆனால், இது ஒன்றும் கொண்டாடப்பட வேண்டிய மன்னிப்பு அல்ல என்பதும் எனக்குத் தெரியும். இந்த வழக்கின் அடுத்தடுத்த கட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பது மிக முக்கியம். வேடனின் இந்த மன்னிப்பு பதிவு சரியாக இல்லை என பாதிக்கப்பட்ட சிலர் நினைக்கிறார்கள் என்பதை அறிந்தவுடன் எனது லைக்கை நீக்கிவிட்டேன். அவரை மன்னிப்பதும், பாதிப்பிலிருந்து மீள நினைப்பதும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை. அவர்கள் பக்கம்தான் நான் என்றும் நிற்பேன். என் செயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலையாளப் படங்கள் திடீர் நிறுத்தம் - தொடரும் சிக்கல்! 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
malayalam cinema pvr issue

மலையாளத் திரையுலகில் இந்த ஆண்டு தொடர்ந்து பல படங்கள் அடுத்தடுத்து சாதனை படைத்து வருகிறது. மஞ்சும்மல் பாய்ஸ் முதன் முதலில் ரூ.200 கோடி வசூலித்த படமாக இருக்கிறது. ஆடுஜீவிதம் குறுகிய நாட்களில் ரூ.100 கிளப்பில் இணைந்தது. மேலும் பிரேமலு, பிரம்மயுகம் எனத் தொடர் வெற்றிப் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

இந்தச் சூழலில் அண்மையில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிர்வாகம் மலையாளப் படங்களை, திடீரென அவர்களது திரையரங்குகளில் திரையிடுவதை எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுத்தினர். இதற்கு காரணமாக திரையிடப்படும் விபிஎஃப் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் தங்களது திரையரங்குகளில் க்யூப், யுஎஃப்ஓ, உள்ளிட்ட சில ஃபார்மெட்களில் படங்களைத் திரையிடுவதற்கு விபிஎஃப் என்ற கட்டணத்தை தயாரிப்பாளர்களிடத்தில் வசூலித்து வந்தனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், மாற்றாக ‘பிடிசி’ எனப்படும் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் படங்களை திரையிட வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் இந்த முடிவை எதிர்த்துதான் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிர்வாகம் மலையாளத் திரைப்படங்களை நிறுத்தியுள்ளார்கள்.  இதனால் இந்த விவகாரம் தற்போது மலையாளத் திரையுலகில் பெரிதாக பேசப்படுகிறது. திரைப்படங்கள் திரையிடப்படாததால் வசூலைப் பாதிப்பதாக தயாரிப்பாளர்கள் கூறிவருகின்றனர். அதனால் இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பேசி, பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தால் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆவேஷம், வருஷங்களுக்கு சேஷம், ஜெய் கணேஷ் ஆகிய மலையாளப் படங்கள் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

‘பிரேமலு’ படத்தைப் பாராட்டிய முன்னணி தமிழ் நடிகர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
The leading Tamil actor praised the film 'Premalu'

சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, பிரமயுகம் போன்ற படங்கள் தமிழ் ரசிகர்கர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. 

இதில், ‘பிரேமலு’ திரைப்படத்தை கிறிஸ் ஏ.டி. இயக்கியிருந்தார்.  நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகிய நான்கு நடிகர்கள் தயாரித்திருந்தனர். விஷ்ணு விஜய் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதால், தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த 15 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகி, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் ‘பிரேமலு’ படம் இடம்பெற்றுள்ளது.

The leading Tamil actor praised the film 'Premalu'

இந்த நிலையில், ‘பிரேமலு’ படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், “அழகான பொழுதுபோக்கு நிறைந்த படத்தை கொடுத்ததற்காக ‘பிரேமலு’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.