Skip to main content

”நான் அதுக்கெல்லாம் தயங்காதவன்” - ப்ளூ சட்டை மாறனுக்கு பார்த்திபன் பதிலடி 

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

Parthiban

 

பார்த்திபன் இயக்கத்தில் நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படமாக உருவான 'இரவின் நிழல்' திரைப்படம், கடந்த 15ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இந்தப் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமெல்ல என்று விமர்சித்திருந்த நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் குரல் பதிவு ஒன்றை பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.

 

அந்தப் பதிவில், “இரண்டு நாட்களாக நடந்துகொண்டிருக்கும் பிரச்சனைக்கான தன்னிலை விளக்கம்தான் இந்தப் பதிவு. கடந்த ஒரு வருடமாக உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்று என்னுடைய படத்தை நான் விளம்பரப்படுத்திக்கொண்டு இருந்தேன். உலக படங்களுக்கு இசையமைக்கும் ரஹ்மான்தான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அவருடன் பெரிய டீம் இருந்தது. இது உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் இல்லையென்றால் நிச்சயம் அவர்கள் சொல்லியிருப்பார்கள். ஏற்கனவே நான் லீனியர் முறையில் சிங்கிள் ஷாட் படம் வந்துவிட்டதாக ப்ளூ சட்டை மாறன் கூறும் படத்தினை நான் இதுவரை பார்த்ததில்லை.  

 

ஒத்த செருப்பு படத்தின்போது இது மாதிரி படங்கள் வந்திருக்கிறது என்று கூறித்தான் அந்தப் படத்தை விளம்பரப்படுத்தினேன். உலகத்தின் முதல் சோலோ ஆக்ட் படம் என்று அந்தப் படத்தை நான் கூறவில்லை. அதேபோல சிங்கிள் ஷாட் படம் என்று இணையத்தில் போட்டு பார்த்தால் சில படங்கள் வருகின்றன. நான் லீனியர் முறையில் படங்கள் இருக்கிறதா என்று பார்த்தால் அன்றைக்கும் இல்லை, இன்றைக்கும் இல்லை. மாறன் நேர்மையானவராக இருந்திருந்தால் ஏற்கனவே ஒரு படம் இருக்கிறது, அதனால் உலகின் முதல் நான் லீனியர் திரைப்படம் என்று போடுவது தவறு என்று முன்பே சொல்லியிருக்கலாம். அவர் சொல்லியிருந்தால் உலகத்தின் இரண்டாவது படம், ஆசியாவின் முதல் படம், இந்தியாவின் முதல் படம் அல்லது கோடம்பாக்கத்தின் முதல் படம் என்றுகூட போட்டிருப்பேன். அதற்கெல்லாம் நான் தயங்காதவன். மற்றவர்களின் உழைப்பை எடுத்து மக்களை ஏமாற்றக்கூடியவன் அல்ல. 

 

படம் பற்றிய அவர் விமர்சனம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது பிரச்சனையில்லை. 15 நாட்களுக்கு முன்புகூட ஸ்பெஷல் ஷோவில் படம் பார்க்க அவரை அழைத்தேன். அன்றைக்குக்கூட அவர் சொல்லியிருக்கலாம். ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்த்துவிட்டு என் படத்திற்கு செல்லுங்கள் என்று நான் பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறேன். அவரின் விமர்சனத்தை பார்த்துவிட்டு படம் பார்த்தவர்கள், அவர் சொன்னதுபோல இல்லை என்று வெளியே வந்து சொல்லியிருக்கிறார்கள்” எனப் பேசியுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எல்லாமே வித்தியாசமாக இருக்கு” - நக்கீரன் ஆசிரியர் பாராட்டு

Published on 02/03/2024 | Edited on 02/03/2024

 

சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் ஆசிரியர், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச்சாஸ் உணவகத்தில் நுழைந்தவுடன் உலகப் புகழ்பெற்ற ஓவிய கலைஞர் ஏ.பி. ஸ்ரீதர் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களைப் பார்த்து ரசித்தனர். இந்த ஓவியங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் துவங்கி முழுமை பெற்றது குறிப்பிடத்தக்கது. பார்த்திபன் வர்ணம் தீட்டி குத்துவிளக்கை ஏற்றினார். உணவகத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவரும், இச்சாஸ் நிறுவனருமான கணேஷ் ராம், பாரம்பரியம் மிக்க இந்திய  உணவு வகைகளைக் கொண்டு வயிற்றுப் பசியை மட்டுமின்றி மன நிறைவை தரும் அனுபவத்தை வழங்க விரும்புவதாக தெரிவித்தார். 

இச்சாஸ் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய நக்கீரன் ஆசிரியர், “இந்த கடை ஓபனிங்கே சிறப்பா இருக்கு. இந்த கடை மேலும் சிறக்க வாழ்த்துகள். நிறுவனர் கணேஷ் மேலும் பல கிளைகளை இதே போன்று திறக்க வாழ்த்துகிறேன். துவக்கத்திலேயே விளக்கில் பெயிண்ட் அடித்தது, கடையின் வடிவமைப்பு என எல்லாமே வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இங்கு வைக்கப்பட்டு இருக்கும் ஓவியங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் துவங்கி முடித்திருக்கிறார் ஓவியர் ஸ்ரீதர். ஒரு விடுதிக்கு வந்தோம், சாப்பிட்டோம் என்றில்லாமல், சிறப்பான அனுபவத்தை இச்சாஸ் கொடுக்கிறது.

பெரிய கோப்பையில் காஃபி கொடுத்து, அதை குடிக்க உலகின் சிறிய கோப்பையை வழங்கியது மிகவும் வித்தியாசமாக இருந்தது. இது போன்று பல வித்தியாசங்களை ஒருங்கே வைத்திருக்கும் இச்சாஸ் அதிக கிளைகளுடன் நீண்ட காலத்திற்கும், இதை சார்ந்து இருப்பவர்களுக்கும் நன்மையை கொடுக்க வேண்டும் என நக்கீரனின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Next Story

“பி.ஜே.பி-க்கு ஓட்டு கேக்குறன்னு நினைக்காதீங்க” - பார்த்திபன் நக்கல்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
parthiban about bjp

சென்னையில் நடந்த ஓட்டல் திறப்பு விழாவில் நக்கீரன் ஆசிரியர், இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்பு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய நக்கீரன் ஆசிரியர் ஓட்டலுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

பின்பு பேசிய பார்த்திபன், “உள்ள நுழையும்போது பார்த்திபனா வந்தேன். ஆனா ரிப்பன் கட் பண்ணும்போது என்னை செல்வமணி போல் ஆக்கிட்டாங்க. தலை நிறைய ரோஜா. செல்வமணி தான் ரோஜாவை தலையில தூக்கி வச்சிட்டு ஆடுவார். இங்க இருக்கிற எல்லாமே ரசனையோடு இருக்கு. உலகத்தில் மக்கள் தொகை தோன்றுவதற்கு காரணம் ஃபர்ஸ்ட் நைட் தான். ஆனா ஃபர்ஸ்ட் டே-வை இவ்ளோ சிறப்பா கொண்டாடினது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன். எல்லா தரத்து மக்களும் நல்ல விதமான ரசனையுடன் கூடிய ஒரு ஹோட்டலில் சாப்படணும்னு ஆசைப்படுறாங்க. விலை பத்தி கவலைப்படுவதில்லை. 

காஃபியின் மேல இருக்கிற நுரையில் தாமரை பூவெல்லாம் போட்ருப்பாங்க. அதை பார்த்தாலே டேஸ்டாயிருக்கும். ஏதோ பி.ஜே.பி-க்கு ஓட்டு கேக்குறன்னு நினைக்காதீங்க. அதுல இலை மாதிரியும் போட்ருப்பாங்க” என நக்கல் கலந்து நையாண்டியுடன் பேசினார். மேலும் அவர் தற்போது இயக்கி வரும் டீன்ஸ் படம் குறித்து சொன்ன அவர், “எப்பவுமே வித்தியாசமான முயற்சிலாம் பண்ணுவேன். ஆனா இந்த முறை ரொம்ப வித்தியாசமா கலக்‌ஷனுக்காக படம் பண்ண போறேன். இதுவரை பண்ண முயற்சிகள் எல்லாம் பரிட்சார்த்தமானதா இருக்கும். அதிலிருந்து வித்தியாசப்பட்டு இந்த படம் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றார்.