Advertisment

“‘நானே வருவேன்’னு சொல்லித்தான் வந்தேன், ஏன்னா.." - வார்த்தையால் விளையாடிய பார்த்திபன் 

parthiban talk about ponniyin selvan movie

Advertisment

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30(நாளை) ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இதனையொட்டி தீவிரமாக ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வந்தது. சென்னை, பெங்களூரு டெல்லி ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்துவிட்டுப்மீண்டும் சென்னை திரும்பிய படக்குழு இன்று மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது.

அதில் பேசிய பார்த்திபன்,"நானே வருவேன் என்று சொல்லி அடம்பிடித்தான் இன்றைக்கு இங்கே வந்திருக்கிறேன். என்னை இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்குஅழைத்தபோது முதலில் நான் வரவில்லை, தஞ்சாவூர் போறேன், அங்கு படத்தை பார்த்துவிட்டு, பிறகு ராஜராஜ சோழனுக்கு மரியாதையைசெலுத்த உள்ளேன். அதனால் என்னால் வர முடியாதுன்னுசொன்னேன். ஆனால் இந்த மேடையைதவற விட்டுவிட கூடாது என்பதற்காக அடம்பிடித்துநானே வருவேன்னுசொல்லிட்டு வந்திருக்கேன்.ஏன்னா இந்த மாதிரியான பிரம்மாண்ட மேடை இன்னும் எத்தனை படத்திற்கு பார்க்க போறேன்னு தெரியல. நம்ம காதலியை இன்னொருத்தன் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போனா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு. அந்த மாதிரிஇவ்வளவுநாளா நாம காதலித்தபடம் நாளைக்கு ரசிகர்கள் கிட்டபோகும் போது, சந்தோஷமாகஇருந்தாலும், ஒரு பக்கம் வருத்தமாக இருக்கு" என்று தானே உரித்தான வார்த்தை விளையாட்டில் பேசி பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தினார்.

ACTOR PARTHIBAN maniratnam ponniyin selvan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe