இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று (15.05.2021) தனது 37வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்குப் பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் வாழ்த்துகள் தெரிவித்துவரும் நிலையில், இயக்குநர், நடிகர் பார்த்திபன் சந்தோஷ் நாராயணனுக்கு பிறந்தநாள் வாழ்த்தோடு பிறந்தநாள் டிபியை வெளியிட்டு ட்வீட் செய்துள்ளார். அதில்...
"பார்த்தல்
பேசுதல்
அனைத்தல்
சுவைத்தல்-நீக்கியும்
நினைத்தல்
நீடித்தல்
காதல்!
நண்பர் சந்தோஷ் நாராயணன்
நட்பு காதலுக்கே உரிய ஊடலுக்குரியது.
“ஏய்!
என் தலைக்கேறுற”
மாயாவி’ பாடல்
என் ஆவிக்குள்ளும்
புகுந்து கபடி ஆடுகிறது.
இன்றும்.
பிறந்த நாள்
D P-ஐ
வெளியிடுவதில்
பெருமை!" என பதிவிட்டுள்ளார்.