Advertisment

"படம் பார்க்க வராவிட்டாலும் பரவாயில்லை, ஆனால்" -பார்த்திபன் வேண்டுகோள்

oththa serupu

இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக தருபவர்.ஹவுஸ்புல், ‘கதைதிரைக்கதை வசனம் இயக்கம்',போன்ற படங்கள்அதற்குஉதாரணம். இவர் கடைசியாகஒத்த செருப்புபடத்தைஎழுதி இயக்கியிருந்தார்.

Advertisment

பார்த்திபன்ஒருவர் மட்டுமேநடித்திருந்த இப்படத்தை,அவரேதயாரித்திருந்தார். உலக சினிமா வரலாற்றில், இதற்குமுன்புஒருவர் மட்டுமேநடித்து வெளிவந்தபடங்கள்வெறும் பனிரெண்டுதான்.பார்த்திபனின் இந்த முயற்சி, ஆசியா புக்ஆப்ரெக்கார்ட்ஸ்புத்தகத்தில் இடம்பெற்றது மட்டுமில்லாமல் பல்வேறு விருதுகளை வென்றது.

Advertisment

கரோனாவினால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள்நேற்று முதல்திறக்கப்படுகின்றன. ஆனால் புது படங்கள் எதுவும்வெளியாகவில்லை. ஏற்கனவே வெளியாகிய படங்கள், மீண்டும் திரையிடப்படுகின்றன. அந்த வரிசையில், பார்த்திபனின் ஒத்த செருப்புபடம் மீண்டும் தீபாவளியன்றுதிரையரங்கில் வெளியாகவுள்ளது.ஒத்த செருப்புபடம் எந்தெந்த திரையரங்குகளில் வெளியாகும்எனஇன்று அறிவிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக ட்விட்ஒன்றைபதிவிட்டுள்ள பார்த்திபன், படம் பார்க்க வராவிட்டாலும் பரவாயில்லை, ரசிகர்கள் தங்கள் உடல்நலனை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பார்த்திபன்அந்த ட்விட்டில்,

"தீபாவளிக்கு வாழ்த்துகள்!

திரைக்கு ‘ஒத்த செருப்பு’

திரையரங்குகள் இன்று உறுதியாகும்.

சமூக இடைவெளியோடு முகக் கவசம் அணிந்தபடி

கை சுத்த திரவமுடன்

சர்வ சாக்கிரதையாகபடம் பார்க்க வரவும்.

படம் பார்க்க வராவிட்டாலும் பரவாயில்லை.

உங்கள் உடல் நலனை கவனமாகக் காக்கவும்!! என கூறியுள்ளார்.

ACTOR PARTHIBAN Oththa Serupu Size 7
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe