Skip to main content

“அதையெல்லாம் நாம் தடுக்க முடியாது... கடந்துதான் செல்ல வேண்டும்” - மீண்டும் வீடியோ வெளியிட்ட பார்த்திபன்

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

parthiban released a video again and explained issue of his iraivin nizhal movie

 

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான புது முயற்சிகளை மேற்கொண்டு வரும் பார்த்திபன் கடைசியாக 'இரவின் நிழல்' படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட சமர்ப்பிக்கப்படுவதற்காக தேர்விலிருந்த 13 படங்களின் பட்டியலில் 'இரவின் நிழல்' படமும் ஒன்றாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் தனக்கே தெரியாமல் வெளியாகியுள்ளது எனத் தெரிவித்திருந்தார். இப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெயரில் தான் வெளியானது. 

 

ad

 

ஆனால் இப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் இரண்டாவது திரைப்படம் எனவும், இயக்குநர் பார்த்திபன் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார் எனவும் பிரபல வலைதளமான ஐஎம்டிபி (IMDB) வலைதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் சமூக வலைதளத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பார்த்திபன், "நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் ஃபர்ஸ்ட் படம் இரவின் நிழல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். 

 

இந்நிலையில் மீண்டும் இதற்கு விளக்கமளித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், "முதலில் மகிழ்ச்சி. படம் அமேசானில் வெளியாகியிருக்கிறது. எனக்கு எதுவுமே சுலபமா நடக்குறதில்ல. அமேசானில் வெளியானா நல்லா இருக்கும், திரையரங்குகளில் பார்க்காவாதங்க கூட பாப்பாங்கனு ஆசைப்பட்டேன். ஆனால் எந்த நேரத்தில் வெளியாகும் என யாருக்குமே தெரியவில்லை. திடீரென்று ஒரு நாள் காலையில் அது வெளியாகியுள்ளது. 

 

மேலும் இந்தப் படம் பற்றி ஐஎம்டிபி (IMDB) வலைதளத்தில் இடம்பெற்ற கமெண்ட்ஸ் ரொம்ப ஷாக்காக இருந்தது. இதற்கு பின்னாடி என்ன சூழ்ச்சின்னு தெரியல. அது சூழ்ச்சியானும் தெரியவில்லை. அதே மாதிரி, அந்த கமெண்ட் கிட்டத்தட்ட 20 மணி நேரம் கழித்து மாறியிருக்கு; மாறியது இன்னும் ஷாக்காக இருந்தது. புதுசா மாறியிருக்க கமெண்ட் எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை.

 

சினிமாவைத் தாண்டி மத்த விஷயங்களில் எனக்கு ஆர்வம் குறைவு. அது போல் ஐஎம்டிபி என்றால் என்ன, அதில் வரும் கமெண்ட்ஸ் எப்படி வருது என்று மற்றவர்களிடம் கேட்டு தெரிஞ்சிக்கிற ஒரு நபர் நான். எதிர்மறை விமர்சனங்கள், மிகப்பெரிய படைப்பைக் கூட கஷ்டப்படுத்தி விடுகிறது. அதையெல்லாம் நாம் தடுக்க முடியாது. அதைக் கடந்துதான் செல்ல வேண்டும். 

 

என்னிடம் இரவின் நிழல், நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்று நிரூபிக்கும் வகையில் நிறைய சாட்சியங்கள் மற்றும் மிகப்பெரிய அறிஞர்கள் கூறிய சான்றிதழ்கள் இருக்கின்றன. சினிமாவில் வருமானமே இல்லாமல் தொடர்ந்து நல்ல முயற்சிகள் எடுத்து வருகிறேன். மேலும் இரவின் நிழல் படத்தின் மேக்கிங் விரைவில் வரும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதிய உலக சாதனை படைத்த பார்த்திபனின் 'டீன்ஸ்' 

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Parthipans Teenz breaks new world record

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை தொடர்ந்து, '52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். மேலும், இரண்டு படங்களை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இப்போது அதன் பணிகளில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் டீன்ஸ் என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகும் நிலையில் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. 

இப்படத்தின் முதல் பார்வை திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் வெளியிடப்பட்டது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு நிகழ்ச்சியில் 'டீன்ஸ்' படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது. 

Next Story

பள்ளிக்குழந்தைகளின் அமானுஷ்ய அனுபவங்கள் - மணிரத்னம் வெளியிட்ட ட்ரைலர்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Parthiban Teenz trailer released

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை தொடர்ந்து, '52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். மேலும் இரண்டு படங்களை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இப்போது அதன் பணிகளில் பிசியாக இருக்கிறார். 

இந்த நிலையில் டீன்ஸ் என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து இப்படம் உருவகும் நிலையில் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. 

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. படத்தை பார்க்கையில், பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஒரு நாள் பள்ளிக்கூடத்தை கட்டடித்து விட்டு நண்பரின் பண்ணை வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு 500 வருட பழமைவாய்ந்த பாழுங்கிணற்றை பார்க்கின்றனர். அந்த கிணறு குறித்து அமானுஷியங்கள் நிறைந்த பேய் கதைகள் இருக்கும் கூறப்படும் நிலையில் அந்த பண்ணையில் மாட்டிக்கொள்கின்றனர். அதிலிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதை திகில் கலந்து கூறியிருப்பது போல் அமைந்துள்ளது. இந்த ட்ரைலரை மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டார்.