Skip to main content

மகள் படிப்புக்கான பணத்தை எடுத்து மக்களுக்கு உதவிய சலூன் கடைக்காரருக்கு பரிசளித்த பார்த்திபன்! 

Published on 14/05/2020 | Edited on 14/05/2020
hfdhj

 

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதற்கிடையே கரோனாவால் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் சலூன் கடைக்காரர் மோகன் என்பவர் தன்னுடைய மகள் படிப்பு செலவிற்காக வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தில் தன்னுடைய பகுதியில் வசிக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவி செய்து வருவதை பாராட்டி நடிகர் பார்த்திபன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...


"மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், அருகில் உள்ள நெல்லை தோப்பு கரோனா பாதிப்பால் முழுவதுமே முடக்கப்பட்டது. பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாளர்களை அதிகம் வசிக்கும் அந்த பகுதியில் வாழும் மக்களின் பெருந்துயர் கண்டு, சிறு சிறு உதவிகளை செய்து வந்தார். தனது மகளின் மேற்படிப்புக்காக பல வருடங்களாக சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை தவிர, வேறு எதுவும் இல்லாமல் தவித்தபோது, அவரது மகள் நேத்ரா அந்தப் பணத்தை எடுத்து உதவிடுமாறு கூற, மொத்த பணத்தையும் எடுத்து அந்த பகுதியில் வசித்து வந்த சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை, மற்றும் காய்கறிகள் தொகுப்பை உரிய அனுமதி பெற்று வழங்கியிருக்கிறார். 

 

 


இந்த செய்தி என்னை பெரிதாகப் பாதித்த நிலையில், எனது நண்பர் சுந்தர் உதவியுடன் நேத்ராவிடமும், மோகனிடம் பேசி எனது மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் மனநெகிழ்வோடு பகிர்ந்து கொண்டேன். மேலும், தாங்கள் பெரும் பணம் படைத்தவர்கள் இல்லையென்றாலும், உதவ வேண்டும் என்ற மனம் கொண்ட நேத்ராவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று அவர்களுக்கு புதிய ஆடைகள் பட்டு வேஷ்டி, பட்டுப் புடவை, அங்கவஸ்திரம், நேத்ராவுக்கு புது உடைகள், கிரீடம், இனிப்புகள், பழங்கள் என அனைத்தையும் நண்பர் சுந்தர் மூலம் கொடுத்தனுப்பி, பார்த்திபன் மனிதநேய மன்றத்தின் சார்பாக மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். நேத்ராவின் இந்த ஆண்டு பள்ளிப் படிப்புக்குரிய அனைத்துச் செலவுகளையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். மேலும் வேறெந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறேன் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறேன். பார்த்திபன் மனிதநேய மன்றத்தின் சார்பாக இது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவரும் எங்களுக்கு இந்த நிகழ்வு பெரும் மனநிறைவை அளித்தது" என குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எல்லாமே வித்தியாசமாக இருக்கு” - நக்கீரன் ஆசிரியர் பாராட்டு

Published on 02/03/2024 | Edited on 02/03/2024

 

சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் ஆசிரியர், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச்சாஸ் உணவகத்தில் நுழைந்தவுடன் உலகப் புகழ்பெற்ற ஓவிய கலைஞர் ஏ.பி. ஸ்ரீதர் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களைப் பார்த்து ரசித்தனர். இந்த ஓவியங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் துவங்கி முழுமை பெற்றது குறிப்பிடத்தக்கது. பார்த்திபன் வர்ணம் தீட்டி குத்துவிளக்கை ஏற்றினார். உணவகத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவரும், இச்சாஸ் நிறுவனருமான கணேஷ் ராம், பாரம்பரியம் மிக்க இந்திய  உணவு வகைகளைக் கொண்டு வயிற்றுப் பசியை மட்டுமின்றி மன நிறைவை தரும் அனுபவத்தை வழங்க விரும்புவதாக தெரிவித்தார். 

இச்சாஸ் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய நக்கீரன் ஆசிரியர், “இந்த கடை ஓபனிங்கே சிறப்பா இருக்கு. இந்த கடை மேலும் சிறக்க வாழ்த்துகள். நிறுவனர் கணேஷ் மேலும் பல கிளைகளை இதே போன்று திறக்க வாழ்த்துகிறேன். துவக்கத்திலேயே விளக்கில் பெயிண்ட் அடித்தது, கடையின் வடிவமைப்பு என எல்லாமே வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இங்கு வைக்கப்பட்டு இருக்கும் ஓவியங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் துவங்கி முடித்திருக்கிறார் ஓவியர் ஸ்ரீதர். ஒரு விடுதிக்கு வந்தோம், சாப்பிட்டோம் என்றில்லாமல், சிறப்பான அனுபவத்தை இச்சாஸ் கொடுக்கிறது.

பெரிய கோப்பையில் காஃபி கொடுத்து, அதை குடிக்க உலகின் சிறிய கோப்பையை வழங்கியது மிகவும் வித்தியாசமாக இருந்தது. இது போன்று பல வித்தியாசங்களை ஒருங்கே வைத்திருக்கும் இச்சாஸ் அதிக கிளைகளுடன் நீண்ட காலத்திற்கும், இதை சார்ந்து இருப்பவர்களுக்கும் நன்மையை கொடுக்க வேண்டும் என நக்கீரனின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Next Story

“பி.ஜே.பி-க்கு ஓட்டு கேக்குறன்னு நினைக்காதீங்க” - பார்த்திபன் நக்கல்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
parthiban about bjp

சென்னையில் நடந்த ஓட்டல் திறப்பு விழாவில் நக்கீரன் ஆசிரியர், இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்பு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய நக்கீரன் ஆசிரியர் ஓட்டலுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

பின்பு பேசிய பார்த்திபன், “உள்ள நுழையும்போது பார்த்திபனா வந்தேன். ஆனா ரிப்பன் கட் பண்ணும்போது என்னை செல்வமணி போல் ஆக்கிட்டாங்க. தலை நிறைய ரோஜா. செல்வமணி தான் ரோஜாவை தலையில தூக்கி வச்சிட்டு ஆடுவார். இங்க இருக்கிற எல்லாமே ரசனையோடு இருக்கு. உலகத்தில் மக்கள் தொகை தோன்றுவதற்கு காரணம் ஃபர்ஸ்ட் நைட் தான். ஆனா ஃபர்ஸ்ட் டே-வை இவ்ளோ சிறப்பா கொண்டாடினது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன். எல்லா தரத்து மக்களும் நல்ல விதமான ரசனையுடன் கூடிய ஒரு ஹோட்டலில் சாப்படணும்னு ஆசைப்படுறாங்க. விலை பத்தி கவலைப்படுவதில்லை. 

காஃபியின் மேல இருக்கிற நுரையில் தாமரை பூவெல்லாம் போட்ருப்பாங்க. அதை பார்த்தாலே டேஸ்டாயிருக்கும். ஏதோ பி.ஜே.பி-க்கு ஓட்டு கேக்குறன்னு நினைக்காதீங்க. அதுல இலை மாதிரியும் போட்ருப்பாங்க” என நக்கல் கலந்து நையாண்டியுடன் பேசினார். மேலும் அவர் தற்போது இயக்கி வரும் டீன்ஸ் படம் குறித்து சொன்ன அவர், “எப்பவுமே வித்தியாசமான முயற்சிலாம் பண்ணுவேன். ஆனா இந்த முறை ரொம்ப வித்தியாசமா கலக்‌ஷனுக்காக படம் பண்ண போறேன். இதுவரை பண்ண முயற்சிகள் எல்லாம் பரிட்சார்த்தமானதா இருக்கும். அதிலிருந்து வித்தியாசப்பட்டு இந்த படம் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றார்.