Advertisment

''சூர்யா ஒரு தைரியலட்சுமியின் புருஷன்'' - ரா.பார்த்திபன் பாராட்டு!

jjg

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இணைந்து தயாரித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ள இப்படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள நிலையில் இதுகுறித்து இயக்குனர் பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார். அதில்...

Advertisment

"ஏழை மக்களின் வாழ்வைப் பாதிக்கிற கடையை மூடலாமா, வேண்டாமா என்று உயர் நீதிமன்றம் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை படிப்படியாக ஏறி இறங்கிப் போராடி வரும் இந்த நேரத்தில், நம்ம முடியைத் திருத்தலாமா வேண்டாமா என்ற யோசனை வந்துவிட்டது. திருத்தம் என்பது முடியில் மட்டுமே இல்லை, நிறைய முடிவுகளிலும் இருக்கிறது. சட்டத் திருத்தங்கள், தொழில் சார்ந்த வரைமுறை திட்டங்கள், அதில் சில திருத்தங்கள் இப்படி நிறைய தேவைப்படுகிறது. இப்போது ஏன் அதெல்லாம் என்கிறீர்களா... 'பொன்மகள் வந்தாள்' டிஜிட்டலில் மே 29- ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது. தைரியம்தான் புருஷ லட்சணம் என்று சொல்வார்கள். ஒரு தைரியலட்சுமியின் புருஷன் எத்தனை வைராக்கியத்துடன் தன் துணையின் காதல் கணவராக, கவுரவக் காவலனாக, வைத்த காலைப் பின்வாங்காத வையக வீரராக ஒழுக்கம், தெளிவு, தைரியமுடன் 'பொன்மகள் வந்தாள்' படத்தை அமேசானில் வெளியிடுகிறார் சூர்யா. இந்தப் படத்தின் அறிமுக இயக்குனர் பிரட்ரிக் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/sV01sWJB9uE.jpg?itok=_03mPyKq","video_url":" Video (Responsive, autoplaying)."]}

jothika ACTOR PARTHIBAN ponmagal vanthaal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe