Skip to main content

இப்படத்தில் என்ன புது முயற்சி? - பார்த்திபனின் அடுத்த படம் அறிவிப்பு

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

parthiban next movie update

 

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான புது முயற்சிகளை மேற்கொண்டு வரும் பார்த்திபன் கடைசியாக 'இரவின் நிழல்' படத்தை இயக்கி நடித்திருந்தார். ஆஸ்கர் விருதுக்குத் தகுதியான 301 திரைப்படங்களின் பட்டியல் வெளியான நிலையில் அதில் இப்படம் இடம்பெற்றது. இதுகுறித்து பார்த்திபன், "ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை பட்டியலில் மட்டுமே ‘இரவின் நிழல்’ இருக்கிறது. ஆனால் 'ஆர்.ஆர்.ஆர்' ஆஸ்கர் நாமினேஷன் செய்யப்படவுள்ள லிஸ்டிலேயே இருக்கிறது. வெற்றி வாய்ப்பும் வெளிச்சமாகவே இருப்பது நமக்கெல்லாம் பெருமையே! அதற்காக (அப்படத்திற்கு மட்டுமல்ல எல்லா ஹாலிவுட் படங்களுக்கும் கூட) மிகப்பெரிய செலவில் செய்யப்பட்டது உலகறிந்தது" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இதையடுத்து தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வழக்கம்போல தனது வித்தியாசமான ஸ்டைலில் சொன்னார். அதாவது, தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு புடவையோட அழகு அதோட தலைப்புல தெரியும். அந்த மாதிரி இந்த டிசைனுக்குள்ள இருக்க திரைப்படத்தோட தலைப்பை கண்டுபிடிங்க பாக்கலாம்" எனக் குறிப்பிட்டு ஒரு புத்தகத்தின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவு தொடர்பாக ரசிகர்கள் பலரும் தங்களது தலைப்பை கமெண்ட் செய்திருந்தனர். இதையடுத்து மற்றொரு பதிவில், "என் தலைப்பை யூகித்த ஒவ்வொருவருக்கும் அழகான தலைப்பைக் கொண்ட புடவை ஒன்று பொங்கல் பரிசாக வழங்கப்படும்! 'புடவையை வாங்கி நாங்க என்ன கட்டிக்கவா முடியும்' எனக் கடுப்படிக்கும் ஆண்மாக்களுக்கு… கட்டிக்கிட்டவங்களுக்கு குடுங்க.. இல்ல கட்டிக்கப் போறவங்களுக்கு குடுங்க!" எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு இயக்குநர் சீனு ராமசாமி, "தலைப்பை விடுங்க.. எதுக்கு 53 பக்கம் மயிலிறகு?" எனக் குறிப்பிட்டுள்ளார். பார்த்திபனின் இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி,  அவரது தலைப்பிற்காகவும் ரசிகர்கள் காத்திருந்தனர். 

 

இந்த நிலையில் பார்த்திபன் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி '52ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்ற தலைப்பில் படமெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இப்படத்தை அகிரா ப்ரொடக்சஷன் தயாரிக்க பார்த்திபன் இயக்க படத்தின் தலைப்பு போஸ்டரை பார்த்திபன் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து படத்துக்கு படம் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் பார்த்திபன் இந்தப் படத்தில் என்ன முயற்சி எடுப்பார் என்று தெரியவில்லை. அதைப்பற்றி எதுவும் அறிவிப்பில் குறிப்பிடாத நிலையில் எந்த மாதிரியான படமாக இருக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் அதை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

 

இதனிடையே படத்தின் தலைப்பை சரியாக சொன்னவர்களுக்கு புடவை வழங்குமாறும் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு பொங்கல் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதிய உலக சாதனை படைத்த பார்த்திபனின் 'டீன்ஸ்' 

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Parthipans Teenz breaks new world record

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை தொடர்ந்து, '52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். மேலும், இரண்டு படங்களை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இப்போது அதன் பணிகளில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் டீன்ஸ் என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகும் நிலையில் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. 

இப்படத்தின் முதல் பார்வை திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் வெளியிடப்பட்டது. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், 'டீன்ஸ்' திரைப்படத்தின் இசை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் 'டீன்ஸ்' திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு நிகழ்ச்சியில் 'டீன்ஸ்' படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது. 

Next Story

பள்ளிக்குழந்தைகளின் அமானுஷ்ய அனுபவங்கள் - மணிரத்னம் வெளியிட்ட ட்ரைலர்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Parthiban Teenz trailer released

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை தொடர்ந்து, '52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். மேலும் இரண்டு படங்களை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இப்போது அதன் பணிகளில் பிசியாக இருக்கிறார். 

இந்த நிலையில் டீன்ஸ் என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து இப்படம் உருவகும் நிலையில் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. 

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. படத்தை பார்க்கையில், பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஒரு நாள் பள்ளிக்கூடத்தை கட்டடித்து விட்டு நண்பரின் பண்ணை வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு 500 வருட பழமைவாய்ந்த பாழுங்கிணற்றை பார்க்கின்றனர். அந்த கிணறு குறித்து அமானுஷியங்கள் நிறைந்த பேய் கதைகள் இருக்கும் கூறப்படும் நிலையில் அந்த பண்ணையில் மாட்டிக்கொள்கின்றனர். அதிலிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதை திகில் கலந்து கூறியிருப்பது போல் அமைந்துள்ளது. இந்த ட்ரைலரை மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டார்.