parthiban next movie update

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான புது முயற்சிகளை மேற்கொண்டு வரும் பார்த்திபன் கடைசியாக 'இரவின் நிழல்' படத்தை இயக்கி நடித்திருந்தார். ஆஸ்கர் விருதுக்குத்தகுதியான 301 திரைப்படங்களின் பட்டியல் வெளியான நிலையில் அதில் இப்படம் இடம்பெற்றது. இதுகுறித்து பார்த்திபன், "ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை பட்டியலில் மட்டுமே ‘இரவின் நிழல்’ இருக்கிறது. ஆனால் 'ஆர்.ஆர்.ஆர்' ஆஸ்கர் நாமினேஷன் செய்யப்படவுள்ள லிஸ்டிலேயே இருக்கிறது. வெற்றி வாய்ப்பும் வெளிச்சமாகவே இருப்பது நமக்கெல்லாம் பெருமையே! அதற்காக (அப்படத்திற்கு மட்டுமல்ல எல்லா ஹாலிவுட் படங்களுக்கும் கூட) மிகப்பெரிய செலவில் செய்யப்பட்டது உலகறிந்தது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இதையடுத்து தனது அடுத்த படத்தின் அறிவிப்பைவழக்கம்போல தனது வித்தியாசமான ஸ்டைலில்சொன்னார். அதாவது, தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு புடவையோட அழகு அதோட தலைப்புல தெரியும். அந்த மாதிரி இந்த டிசைனுக்குள்ள இருக்க திரைப்படத்தோட தலைப்பை கண்டுபிடிங்க பாக்கலாம்" எனக் குறிப்பிட்டு ஒரு புத்தகத்தின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவு தொடர்பாக ரசிகர்கள் பலரும் தங்களது தலைப்பை கமெண்ட் செய்திருந்தனர்.இதையடுத்து மற்றொரு பதிவில், "என் தலைப்பை யூகித்த ஒவ்வொருவருக்கும் அழகான தலைப்பைக் கொண்ட புடவை ஒன்று பொங்கல் பரிசாக வழங்கப்படும்! 'புடவையை வாங்கி நாங்க என்ன கட்டிக்கவா முடியும்' எனக் கடுப்படிக்கும் ஆண்மாக்களுக்கு… கட்டிக்கிட்டவங்களுக்கு குடுங்க.. இல்ல கட்டிக்கப் போறவங்களுக்கு குடுங்க!" எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு இயக்குநர் சீனு ராமசாமி, "தலைப்பை விடுங்க.. எதுக்கு 53 பக்கம் மயிலிறகு?" எனக் குறிப்பிட்டுள்ளார். பார்த்திபனின் இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி, அவரது தலைப்பிற்காகவும் ரசிகர்கள் காத்திருந்தனர்.

Advertisment

இந்த நிலையில் பார்த்திபன் தனது அடுத்த பட அறிவிப்பைவெளியிட்டுள்ளார். அதன்படி '52ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்ற தலைப்பில் படமெடுக்கவுள்ளதாகத்தெரிவித்துள்ளார். இப்படத்தை அகிரா ப்ரொடக்சஷன் தயாரிக்க பார்த்திபன் இயக்க படத்தின் தலைப்பு போஸ்டரை பார்த்திபன்வெளியிட்டுள்ளார். தொடர்ந்து படத்துக்கு படம் வித்தியாசமான முயற்சிகளைமேற்கொள்ளும்பார்த்திபன் இந்தப் படத்தில் என்ன முயற்சி எடுப்பார்என்று தெரியவில்லை. அதைப்பற்றி எதுவும்அறிவிப்பில்குறிப்பிடாத நிலையில் எந்தமாதிரியானபடமாகஇருக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.விரைவில் அதைஅறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே படத்தின்தலைப்பை சரியாக சொன்னவர்களுக்கு புடவை வழங்குமாறும் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு பொங்கல் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.