Skip to main content

வாக்குறுதி கொடுத்த மகன்; பிறவிப் பயனாக கருதும் பார்த்திபன்

Published on 16/06/2025 | Edited on 16/06/2025
parthiban introduce his son and said he is acting in his son debutant movie

இயக்கம் மற்றும் நடிப்பு என பயணித்து வரும் பார்த்திபன் இயக்குநராக டீன்ஸ் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். நடிகராக பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். பின்பு சமுத்திரக்கனி நடித்த திரு. மாணிக்கம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இப்போது மலையாளத்தில் 11 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார். இதையடுத்து ‘54ஆம் பக்கத்தில் மயிலிறகு’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கவுள்ளார்.

இந்த நிலையில் தனது மகன் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக பார்த்திபன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ராக்கி பார்த்திபன். என் மகன் என் உயிருக்கு நிகர். கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம், ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குநர் விஜய்யிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார். விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன்.

அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன்.  என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிடமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் கிளாஸ் அபார்ட். அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே  எனக்கு சிறந்த நாள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்