Skip to main content

படப்பிடிப்பில் நடிகை கழுத்தில் காயம்..! படப்பிடிப்பு நிறுத்தம்!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹிந்தி நடிகை பரினீதி சோப்ரா சாய்னா நேவாலாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு பரினீதி சோப்ரா கழுத்தில் காயம் அடைந்தார்.

 

parineeti

 

 

இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து பரினீதி சோப்ரா சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''எனக்கு படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக கழுத்தில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக பிசியோதெரபி சிகிச்சை எடுத்தேன். இப்போது தேறி வருகிறேன்” என்று பதிவிட்டு கழுத்தில் காயம்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தன்னுடைய நாகரீகமற்ற நகைச்சுவைக்கு மன்னிப்பு கேட்கிறேன்'-சித்தார்த் ட்வீட்!

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

 'I apologize for his rude joke' - Siddharth tweets!

 

சமூக வலைத்தளங்களில்  ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அத்துடன் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதும் வழக்கம். அந்த வகையில்  இந்திய விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் பதிவுக்கு சித்தார்த்தின் பதில் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் பஞ்சாப் சென்ற போது போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார்.  இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சாய்னா நேவால் தனது சமூக வலைதள பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். அதில், "எந்த நாடும் தனது சொந்த பிரதமரின் பாதுகாப்புக்கு சமரசம் செய்தால், தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது.பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நான் வலுவாக கண்டிக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இதற்கு பதிலளித்த சித்தார்த்தின் பதிவு சர்ச்சைக்குள்ளாகியது. இவரின் இந்த பதிவு பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி தேசிய மகளிர் ஆணையம் மஹாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் எழுதி இருக்கிறது. மேலும் அவரின் இந்த பதிவு விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பெண்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி  அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

 

இந்நிலையில் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டு டிவிட்டரில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடைய நாகரீகமற்ற நகைச்சுவைக்கு மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்துள்ள சித்தார்த், 'ஒரு நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை என்றால் அது சிறந்த நகைச்சுவையே அல்ல, தங்களது ட்வீட்டுக்கு பதிலாக நான் பதிவிட்ட வார்த்தைகள் அதன் விதத்தை நியாயப்படுத்த முடியாது. என்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். எப்போதும் நீங்கள் என் சாம்பியன்' என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

 

 

Next Story

பாஜகவில் இணைந்த சாய்னா நேவால்...

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

இந்தியாவை சேர்ந்த முன்னணி பேட்மிட்டன் வீராங்கனையான சாய்னா நேவால் பாஜகவில் இணைந்தார்.

 

saina nehwal joined bjp

 

 

ஒலிம்பிக் மற்றும் கமென்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்காக பல பதக்கங்களை பெற்றவர் சாய்னா. பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது திட்டங்களையும் அடிக்கடி பாராட்டி கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார். கிரிக்கெட் வீரர் கம்பீர், ஹாக்கி வீரர் சந்தீப் சிங் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் பாஜகவில் இணைந்து தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். அந்த வகையில் தற்போது சாய்னாவும் பாஜகவில் இணைந்துள்ளார். வரும் பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலில் இவர் பாஜவுக்காக பிரச்சாரம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாஜகவில் இணைந்த பின் பேசிய அவர், "நான் நாட்டிற்காக பல பதக்கங்களை வென்றுள்ளேன். நான் மிகவும் கடின உழைப்பாளி. அதேபோன்ற கடின உழைப்பாளர்களை நான் விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்காக இவ்வளவு செய்வதை என்னால் பார்க்க முடிகிறது.  அவருடன் இணைந்து நாட்டிற்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன்" என தெரிவித்தார்.