Skip to main content

'குறிப்பாக நாய்களின் நடவடிக்கைகள் வரும் காட்சிகள் அருமை' -  இயக்குநர் பாண்டிராஜ்

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

குடும்பத்தினரின் உணர்ச்சிகள் மற்றும் உறவுகளை அலங்கரிக்கும் வகையில் திரைப்படங்களை தயாரித்து, இயக்கும் பாண்டிராஜிடமிருந்து பாராட்டினை பெற்றுள்ளார் “வாட்ச்மேன்” திரைப்பட இயக்குநர் விஜய். இவரின் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, யோகிபாபு மற்றும் கோல்டன் ரெட்ரீவர் வகையை சேர்ந்த நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ள “வாட்ச்மேன்” திரைப்படத்தினை பார்த்த பாண்டிராஜ் தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும்  தெரிவித்திருக்கிறார்.

 

watchman

 

இதுகுறித்து இயக்குநர் பாண்டிராஜ் கூறுகையில்....“இயக்குநர் விஜய்யின் ‘வாட்ச்மேன்’ திரைப்படம், த்ரில்லர் மற்றும் நகைச்சுவையின் கலவையாக இருந்தது. ஒவ்வொரு காட்சியும் அனுபவித்து பார்த்தேன். திரைகதை மிகவும் சுவாரஸ்யமாகவும், எதிர்பாராத ஆச்சரியமான திருப்பங்களும் நிரைந்திருந்தது. ஜி.வி.பிரகாஷ் மற்றும் யோகிபாபு திறம்பட நடித்துள்ளனர். குறிப்பாக நாய்களின் நடவடிக்கைகள் வரும் காட்சிகள் விரும்பி பார்த்தேன். தொழில்நுட்ப குழு சிறப்பாக பணிப்புரிந்துள்ளனர். மேலும் எடிட்டிங், ஒளிப்பதிவு மற்றும் ரீ-ரெகார்டிங் அனைத்தும் திரைப்படத்தை மெருகேற்றியுள்ளது” என்றார்.

 

 

இதையடுத்து இதுகுறித்து இயக்குநர் விஜய் கூறுகையில்... “பாண்டிராஜ் சார் போன்ற திரைப்பட தயாரிப்பாளரிடமிருந்து, இது போன்ற பாராட்டுகளைப் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘வாட்ச்மேன்' திரைப்படத்திற்கு கிடைத்த புகழாரம், திரைப்படத்திற்கு மற்றுமொரு வலிமை. இயக்குநர் பாண்டிராஜ் அவர்கள் குடும்ப பார்வையாளர்களை தனது தொடர்ச்சியான படங்களின் மூலம் ஈர்த்தவர். அத்தகைய இயக்குநரிடமிருந்து பாராட்டுகளை பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது ‘வாட்ச்மேன்' குழுவினராகிய ஜி.வி.பிரகாஷ், யோகிபாபு,  மேலும் அனைத்து தொழில்நுட்பத் துறையினரும் சிறப்பான பணி செய்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளனர்" என்றார். “வாட்ச்மேன்” திரைப்படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷ்ன், அருண் மொழி மாணிக்கம் தயாரிக்கிறார்.  ஜி. வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இந்த படம் ஏப்ரல் 12,2019 அன்று உலகளவில் வெளியிட திரைப்பட குழுவினரால் திட்டமிடபட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

2வது திருமணத்திற்கு தயாரானார் இயக்குநர் விஜய்

Published on 29/06/2019 | Edited on 29/06/2019

இயக்குனர் விஜய் விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
 

vijay

 

 

அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல். விஜய். பொய் சொல்லப் போறோம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா, தாண்டவம், சைவம், தேவி, வனமகன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மகன் ஆவார்.
 

தெய்வத் திருமகள் படத்தில் அமலா பால் இவர் இயக்கத்தில் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து நீண்ட நாட்களாக இந்த விஷயம் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் 2014ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது.
 

ஆனால், இந்த திருமண உறவி நீடிக்கவில்லை, இரண்டு வருடங்கள் கழித்து 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விவாகரத்து பெற்றனர். 
 

இந்நிலையில், இயக்குநர் விஜய் இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள முன்வந்துள்ளார். ஐஸ்வர்யா என்கிறா மருத்துவரை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுடைய திருமணம், அடுத்த மாதம் 11ஆம் தேதி நடைபெறுகிறது.

 

 

Next Story

வாட்ச்மன் முதல் நாள் முதல் காட்சி மக்கள் கருத்து (வீடியோ)