Skip to main content

சிம்புவை வைத்து எடுத்த படம் என்னை நிலைகுலைய வைத்து விட்டது - பாண்டிராஜ் 

Published on 20/07/2018 | Edited on 20/07/2018
pandiraj

 

 

 

சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான நேர்காணலின் போது இயக்குனர் பாண்டிராஜிடம் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புக்கு ஒழுங்காக செல்வது குறித்து கேட்டபோது.... " 'இது நம்ம ஆளு' படம் என்னை நிலைகுலைய வைத்து விட்டது. தியேட்டரில் படத்தை பார்த்து சிரித்தார்கள், ரசித்தார்கள் என்றாலும் ஒரு இயக்குனராக நான் நினைத்தது வர வில்லை. நினைத்த இசையை கொண்டுவர முடியவில்லை. ஒரு இயக்குனராக மிகுந்த வருத்தமும், ஏமாற்றமும் அடைந்தேன். சிம்பு மணிரத்னத்தின் மேல் உள்ள பயத்தில் படப்பிடிப்பிற்கு ஒழுங்காக சென்றிருப்பார். இருந்தும் என் படத்தின்போதும் அவர் பெரும்பாலும் குறித்த நேரத்திலேயே வந்து விடுவார். அதில் 3 அல்லது 4 நாட்கள் மட்டும் லேட்டாக வந்திருப்பார். மேலும் சிம்புவுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லவும் இல்லை. படம் தாமதமானத்திற்கு காரணம் படத்தின் இசையமைப்பாளராலும், தயாரிப்பு தரப்பினாலும் மட்டுமே தவிர சிம்பு காரணமில்லை. நானும் சிம்புவும் சேர்ந்து மீண்டும் இன்னொரு படம் கண்டிப்பாக பண்ணுவோம்" என்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

ரஜினி,கமல் ஜீரோ;சிம்புதான் ரியல் சூப்பர் ஸ்டார்- சீமான்!!

Published on 06/01/2019 | Edited on 06/01/2019

சென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த  இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,

 

SEEMAN

 

உண்மையிலேயே ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தான் ஆண் மகன். ரஜினிகாந்த், கமல் எல்லாம் பேசக்கூடாது. அவர்கள் ஹீரோக்கள் அல்ல ஜீரோக்கள். என் தம்பி ஒருவர் இருக்கிறார் விஜய். சர்க்கார் படத்தில் பேசினேன் என்றால் ஆமாம் பேசினேன் என்று சொல்லவேண்டியதுதானே. உண்மையிலேயே நீ என் தம்பியா? எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்படுவது. என் படத்தில் நடிக்கமாட்டாரு ஆனால் நான் பேசுவதையெல்லாம் பேசி நடிப்பாரு என் தம்பி விஜய். என்ன செய்வது என் தம்பியாக போய்விட்டார்.

 

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமே என் தம்பி சிலம்பரசன்தான். மூன்று படம் சிம்புவை வைத்து எடுக்கப்போவதாக முடிவு செய்தாச்சு. அதோட பலபேர் நெஞ்சு வெடிக்க போகுது.  தனக்கு நேர்மையானவன், துணிவானவன், அச்சப்படாதவன் அவன்தான் ரியல் சூப்பர் ஸ்டார். கொளுத்தி எடுக்குறோம் அண்ணனும் தம்பியும் சேர்ந்து.

 

எல்லார்கிட்டையும் கதையை சொன்னேன் எல்லாரும் பயந்துட்டாங்க ஆனா நான் நடிக்கிறேன் அண்ணா என்று என் தம்பி சிம்பு மட்டும்தான் சொன்னார். ஏன் சொன்னார் அவர்தான் தமிழன்.  அண்ணாவுக்கு எம்ஜிஆர் அண்ணனுக்கு நீதான்'னு சொல்லிட்டேன்.

என்றார் நகைச்சுவையாக.