Skip to main content

பேரதிர்ச்சியை ஏற்படுத்திய ரங்கராஜ் பாண்டே ! ரசிகர்கள் எதிர்பார்ப்பு 

Published on 15/12/2018 | Edited on 15/12/2018
thala 59

 

அஜித் - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ படம் வரும் பொங்கலன்று வெளியாகவுள்ள  நிலையில், அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க, படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு  விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கும் நிலையில் இப்படத்தில் பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. 

 

 

 

தந்தி தொலைக்காட்சியில் தலைமை செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய ரங்கராஜ் பாண்டே கடந்த சில நாட்களுக்கு முன் தன் வேலையை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் நடிகர் ரஜினிகாந்துடன் அரசியலில் கூட்டணி அமைக்க இருப்பதாகவும், பாரதிய ஜனதா கட்சியில் சேரவுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் அஜித் படத்தில் நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியையும், மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதே போல் டிவி வர்ணனையாளர் கோபிநாத்தும் சினிமாவில் பிரவேசம் செய்து பின்னர் மீண்டும் டிவி நிகழ்ச்சிக்கே சென்றது குறிபிடித்தக்கது. மேலும் இப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய விருது நாயகியுடன் டூயட் பாடும் அஜித் !

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

அஜித் தற்போது போனிகபூர் தயாரித்து, எச்.வினோத் இயக்கும் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து வருகிறார். 'பிங்க்’ ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக வித்யா பாலன், நடிக்கிறார்.

 

Ajith

 

மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதில் அஜித், வித்யா பாலனுக்காக ஒரு காதல் பாடலை எழுதியிருக்கிறார் பா.விஜய். இப்பாடலுக்கு இருவரும் பர்ஃபாமென்ஸ் செய்யவுள்ளனர். மேலும் 'பிங்க்' படத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

அன்பு கட்டளையிட்ட ஸ்ரீதேவி...அவர் மறைந்த பிறகும் நிறைவேற்றிய அஜித்...போனி கபூர் சொன்ன சீக்ரெட் !

Published on 29/01/2019 | Edited on 29/01/2019
ajith

 

விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் அடுத்ததாக பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல் எல் பி நிறுவனத்தின் சார்பில் போனி கபூர்  தயாரிக்க, வினோத் குமார் இயக்கும் 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் நம்மிடம் பகிரும்போது....

 

"அஜித் குமாருடனான எனது நட்பு ,அவர் மறைந்த எனது மனைவி ஸ்ரீதேவியுடன் "இங்கிலீஷ் விங்கிலிஷ்" திரைப்படத்தில் நடிக்கும் போது தொடங்கியது. தனது தாய் மொழியான தமிழில் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்றும் அதில் அஜித் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை ஸ்ரீதேவி எதேச்சையாக அஜித் குமாரிடம் கூறி உள்ளார். நிச்சயமாக என்று கூறிய அஜித் சொன்னவாறே எங்களை தமிழில் படம் தயாரிக்க அழைத்தார். ஸ்ரீதேவி உயிரோடு இருந்த போதே நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு, தற்போது உள்ள சூழ்நிலையில் சமூகத்துக்கு தேவையான ஒரு படத்தை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதன்படி நாங்கள் தேர்ந்து எடுத்த கதைதான் 'பிங்க்'. இப்படத்தின் கருத்து மீது ஸ்ரீதேவி மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தார். அவருடைய கனவை நனவாக்கும் சீரிய முயற்சியில் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஒன்று இணைந்து இருப்பது என்னை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது. அஜித் குமாருடனான தொழில் முறையான எங்கள் உறவு இந்த படத்துடன் நில்லாமல், ஜூலை 2019ல் துவங்கி ஏப்ரல் 2020ல் வெளியிட திட்டமிட்டு இருக்கும் எங்களது  நிறுவனத்தின் மற்றொரு படத்தின் மூலமும் தொடர இருக்கிறது. 

 


 
நான் சினிமாவை விரும்பி பார்ப்பவன் என்கிற முறையில் ஒரு படத்தை பார்ப்பதற்கு முன் அந்த படத்தின் போஸ்டர் வாயிலாக அந்த படத்தின் நடிகர், நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் யார் என்பதை உன்னிப்பாக கவனித்தே முடிவு எடுப்பேன். அந்த வகையில் என் படத்துக்கு வரும் ரசிகர்களும் நம்பிக்கையோடு வர திறமையான டீம் வேண்டும் என்று விரும்பினேன். அவ்வாறே அமைந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி. இயக்குநர் எச்.வினோத் அவருடைய முந்தைய படங்களின் முலம் தனது பன்முக திறமையை காட்டி விட்டார். அவருடைய தொழில் பக்தியும், எண்ணத்தில் இருப்பதை திரையில் கொண்டு வர எடுக்கும் சிரத்தையும் மிக மிக பாராட்டுக்குரியது" என்றார்.