Skip to main content

"கங்கனாவை பார்த்தால் அறைவேன்" - நடிகை ஆவேசம்

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Pakistani actor Nausheen Shah says she wants to slap Kangana Ranaut

 

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். இப்படம் இந்திய முன்னாள் பிரதமர், மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை கங்கனாவே தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

 

இதனிடையே முன்னாள் விமானப்படை விமானியாக 'தேஜஸ்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்கள் அல்லாது தமிழில் பி.வாசு இயக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 15 ஆம் தேதியன்று தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனால் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே தொடர்ச்சியாக சமூக பிரச்சனைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதில் பல கருது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில் கங்கனா குறித்து பாகிஸ்தான் நடிகை தற்போது பேசியுள்ளார். அவர் கங்கனாவை நேரில் பார்த்தால் அறைவேன் என கூறியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், பாலிவுட்டிலிருந்து எந்த நடிகரை நீங்க பார்க்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "கங்கனா ரணாவத்தை சந்திக்க விரும்புகிறேன். அப்படி சந்தித்தால் அவரை இரண்டு அறை அறைவேன். என் நாட்டைப் பற்றி அவர் சொல்லும் விதம், பாகிஸ்தான் ராணுவத்தைப் பற்றி அவர் நிறைய பொய் சொல்லும் விதம், அவருடைய துணிச்சலுக்கு நான் தலை வணங்குகிறேன். ஆனால் அவருக்கு சுத்தமாக எதைப் பற்றியுமே புரிதல் இல்லை. ஆனால் நாட்டைப் பற்றி பேசுகிறார். அதுவும் வேறொரு நாட்டைப் பற்றி. 

 

உங்கள் சொந்த நாட்டில் கவனம் செலுத்துங்கள், உங்கள் நடிப்பில் கவனம் செலுத்துங்கள், உங்கள் இயக்கத்தில் கவனம் செலுத்துங்கள். பாகிஸ்தானில் மக்கள் தவறாக நடத்தப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? பாகிஸ்தான் ராணுவத்தைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்? எங்கள் ஏஜென்சிகளைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்? அது எங்களுக்கே தெரியாது" என கடுமையாக விமர்சித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் குறியீடு - நடிகை தற்கொலை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Bhojpuri actor Amrita Pandey passed awa

போஜ்புரி திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை அம்ரிதா பாண்டே. போஜ்புரி அல்லாது இந்தி படங்கள், வெப் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சில விளம்பரங்களில் கூட நடித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவருடன் மும்பையில் வசித்து வந்த நிலையில் அவரது சகோதரி வீணா பாண்டேவின் திருமணத்திற்காக பீகாரில் உள்ள பாகல்பூரிற்கு சென்றுள்ளார். திருமணத்தை முடித்துவிட்டு அங்கேயே சில நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதன்படி பாகல்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த அம்ரிதா பாண்டே, நேற்று முன்தினம் (27.04.2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்ரிதா பாண்டேவின் தங்கை, அவரது அறைக்கு நேற்று மாலை 3.30 மணியளவில் சென்றுள்ளார். அப்போது அம்ரிதா பாண்டே மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த நிலையில் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

சமீப காலமாக, அம்ரிதா பாண்டே தனக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்பு அமையாததால் மிகுந்த மன வேதனையில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சையும் பெற்று வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. இறப்பதற்கு முன்பாக அவரது வாட்ஸ் அப்பில், “அவளுடைய வாழ்க்கை இரண்டு படகுகளில் உள்ளது, நாங்கள் எங்கள் படகை மூழ்கடித்து அவளது பாதையை எளிதாக்கினோம்” என்ற வாசகம் அடங்கிய ஒன்றை ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இதனிடையே அம்ரிதா பாண்டேவின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தற்கொலை செய்துகொண்டதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Next Story

அதே குற்றச்சாட்டு - சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை மீது மீண்டும் புகார்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
complaint against Sundhara Travels actress radha

முரளி, வடிவேலு உள்ளிட்ட பல பேர் நடிப்பில் 2002ல் வெளியான சுந்தரா ட்ராவல்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. தொடர்ந்து அடாவடி, காத்தவராயன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்பு நடிப்பிலிருந்து விலகியிருந்தார். 

இந்த சூழலில் கடந்த மாதம் ராதா மீதும் அவரது மகன் மீதும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்த டேவிட் ராஜ், தன் மகனை இருவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே ராதா தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் கொடுக்கப்பட்டு, அதன் விசாரணை நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த முரளி என்பவர் தரப்பில், ராதா மீது வடபழனி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முரளியை ராதா தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முரளிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முரளியின் புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து ராதா மீது ஒரே மாதிரியான புகார்கள் எழுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.