Advertisment

நடிகர் ஜானி சின்ஸ் புகைப்படத்தை காஷ்மீர் போராட்டக்காரர் என்று பதிவிட்ட பாக். அதிகாரி....

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35Aஐ நீக்கி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. அத்துடன் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

Advertisment

jhonny sins

இதனையடுத்து பாகிஸ்தான் இந்த முடிவை கடுமையாக கண்டித்து, எதிர்ப்பு தெரிவித்தது. உலக நாடுகளிடம் இந்த விஷயத்திற்கு உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டது. ஆனால், யாரும் முன்வரவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா மட்டும் உதவியது.

இந்நிலையில், பெல்லடி குண்டு விபத்தால் காஷ்மீரை ஒருவர் பாதிக்கப்பட்டுவிட்டார் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் பகிர்ந்துள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம், பார்ன் பட நடிகர் ஜானி சின்ஸ் நடித்துள்ள ஒரு ஆபாச படத்தில், ஜானி சின்ஸ் சிகிச்சை பெறும்போது டாக்டர் கட்டிபிடித்து அழுவதுபோல ஒரு காட்சியை படம் எடுத்து சமூக வலைதளத்தில் யாரோ கிண்டலாக பெல்லட் தாக்குதலில் காயம் அடைந்தவர் என்று பதிவிட்டுள்ளார். அதன் உண்மை தன்மையை அறியாத இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித், ரீட்வீட் செய்துள்ளார்.

Advertisment

alt="zombi" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="601ca251-77ee-41ae-8399-fc95ec1bba18" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/zombi-336x150_2.jpg" />

இதனிடையே அந்த ட்விட்டை சிறிது நேரத்தில் அவர் நீக்கிவிட்ட போதிலும், அது இணையவாசிகள் கையில் சிக்க தற்போது இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசிதை கடுமையாக கலாய்த்து வருகிறார்கள். நேசமணி ஹேஸ்டேக் போல ஜானி சின்ஸ் பேரை பயன்படுத்தி பிரே ஃபார் ஜானி பின்ஸ் என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

article 370 revoked jhonny sins
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe