ADVERTISEMENT
ADVERTISEMENT
காலா படத்தையடுத்து பா.ரஞ்சித் அடுத்ததாக ஹிந்தியில் படம் இயக்கபோவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இவர் தற்போது ஒரு இணைய தொடர் தயாரிக்க இருக்கிறார். இது மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாக இருக்கிறது. சமீபகாலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் இணைய தொடர்களில் ஆர்வம் காட்டி வருவதால் இப்போது பா.ரஞ்சித் தயாரிக்கும் இந்த தொடருக்கு இப்போதே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பரபரப்பான சம்பவங்களை உள்ளடக்கிய சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ஏற்கனவே 'டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் ஹிந்தியில் படமானது குறிப்பிடத்தக்கது.
Show comments