''எல்லோருடைய நம்பிக்கையாக நீலம் புரொடக்ஷன்ஸ் மாறவேண்டும் என்பது என் விருப்பம். உங்களுடைய ஆதரவோடு இன்னும் நிறைய படங்கள் தயாரிக்க உள்ளோம். எங்களோட இரண்டாவது தயாரிப்பு இது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்தப்படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இந்த படம் தயாரிக்க நிறைய பேர் எனக்கு உதவி செய்துள்ளனர். குறிப்பாக என்னுடன் சேர்ந்து கலை இயக்குனர் ராமலிங்கம், பாம்பே வேலன், லேன்பு வேல் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை குறித்த நேரத்தில், குறைவான செலவில் முடித்துக்கொடுத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. படத்தில் நடித்த கலைஞர்கள் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
சில நடிகர்கள் குறைவான சம்பளம் வாங்கி நடித்துக்கொடுத்தனர். சொல்லப்போனால் நடிகர் ஜான் விஜய் இப்படத்தில் நடித்ததற்கு நான் இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை. அவரும் இதுவரை காசு கேட்கவில்லை. இவரை போல படத்தில் நடித்த நடிகைகளும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். சொல்லக்கூடாத, சொல்லமுடியாத கதைகளை சொல்லத்தான் நாங்கள் சினிமாவிற்குள் நுழைந்தோம். அதுபோல் கதையம்சம் கொண்ட நல்ல நல்ல சமீபத்தில் படங்கள் வெளியாகி வெற்றிபெற்றுள்ன. குறிப்பாக அசுரன் மற்றும் கைதி படங்களின் வெற்றி மிக முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. இது பலபேருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. எங்கள் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் இதுபோன்ற நிறைய படங்களை இனி வரும் காலங்களில் தயாரிக்க உள்ளோம்'' என்றார்.