Skip to main content

'என் பெயரை சொல்லி விளம்பரம் தேடுவது வருத்தம் அளிக்கிறது' - ஓவியா வேதனை  

Published on 27/12/2018 | Edited on 27/12/2018
oviya

 

 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு காஞ்சனா 3, களவாணி 2, 90 எம்.எல் படங்களில் நடித்து வரும் நடிகை ஓவியா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் நடிகை ஓவியா ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தன்னை போலி விளம்பரத்துக்காக பயன்படுத்துவது குறித்து ஓவியா தற்போது பேசியுள்ளார். அதில்... "ரசிகர்கள் என்னை அவர்கள் குடும்பங்களில் ஒருவராக தான் பார்க்கிறார்கள். இது என் வாழ்க்கையின் மிக முக்கிய தருணம். சிலர் என்னுடைய ரசிகர்களை தவறாக பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுத்தி சம்பாதிக்கிறார்கள். மேலும் நான் சின்ன சின்ன வேடங்களில் நடித்த படங்களுக்கு கூட என் பெயரை சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். வியாபார பொருட்களிலும் என் பெயரை பயன்படுத்துகிறார்கள். இது வருத்தம் அளிக்கிறது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்