Skip to main content

காதலர் தினத்தில் காட்சி அளிக்கும் ப்ரியா வாரியர் !

Published on 27/01/2019 | Edited on 27/01/2019
priya

 

 

இணையத்தளத்தில் ஹாட் சென்சேஷனாக பேசப்பட்டு வரும் பிரியா பிரகாஷ் வாரியரின் திரைப்படமான  ’ஒரு அடார் லவ்’ தமிழ் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இயக்குனர்  ஓமர் லுலு தற்போது உள்ள பள்ளி பருவ காதலை முன்வைத்து  ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இருந்து ’மாணிக்க மலராய்’ என்ற பாடலும், படத்தின் டீசரும்  வெளியாகி இணையத்தில் வைரலானது. பாடலின் மெட்டை விட, அந்த பாடல் காட்சியில் இடம்பெற்ற பிரியா பிரகாஷ் வாரியர், இளைஞர்கள் இணைய வைரல் அழகியானர். குறிப்பாக அவரின் ரியாக்‌ஷன்கள் மட்டும்  ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பல வெர்ஷனில் ஸ்டேட்சாக மாறியது. இதையடுத்து ’ஒரு அடார் லவ்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்ட படக்குழுவினர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் படத்தை உருவாக்கியுள்ளனர். கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ’ஒரு அடார் லவ்’ திரைப்படம்  உலகம் முழுவதும் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று  வெளியாகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சினிமாவை விட்டு விலகும் பிரியா வாரியர்...? ரசிகர்கள் கவலை ! 

Published on 09/04/2019 | Edited on 09/04/2019
priya varrier

 

கண் சிமிட்டல் மூலம் பிரபலமான பிரியா வாரியர் நடிப்பில் வெளியான ‘ஒரு அடார் லவ்’ படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே அவர் நடித்த ‘ஸ்ரீதேவி பங்களா’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை அவதூறு செய்வதுபோல் காட்சிகள் உள்ளது என்று அவரது கணவர் போனிகபூர் எதிர்த்து வருகிறார். இதனால் கடும் வருத்தத்திலும், கவலையிலும் இருக்கும் பிரியா வாரியர் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
 

Next Story

அப்போது கண்சிமிட்டல் முத்தம்...இப்போது மோதல்...சண்டையிட்ட ஒரு அடார் லவ் நடிகை 

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

'ஒரு அடார் லவ்' படத்தில் கண் சிமிட்டல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். இவர் நடிப்பில் வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. படத்தில் நடித்த சக நடிகை நூரின் ஷெரீப்பிற்கு முன்னுரிமை அளித்து படத்தை உருவாக்க திட்டமிட்டுருந்ததாகவும், பிரியா வாரியர் கண்சிமிட்டல் வைரலானதும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி தயாரிப்பாளர் வற்புறுத்தியதால் பிரியாவாரியரை முதன்மையான கதாபாத்திரமாக்கியதாகவும் பட இயக்குனர் ஓமர் லூலு சமீபத்தில் அறிவித்தார்.

 

oal

 

இதையடுத்து நடிகை நூரின் ஷெரீப், தனக்கு முதன்மை கதாபாத்திரம் என்று சொல்லி பின்னர் பிரியா வாரியருக்கு முக்கியத்துவம் கொடுத்து என்னை ஓரம் கட்டி துணை நடிகையாக்கிவிட்டனர் என வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் காரணாமாக பிரியா வாரியருக்கும், நூரின் ஷெரீப்புக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது. 

 

 

மேலும் நூரின் ஷெரீப்புக்கு பதிலடி அளிக்கும் வகையில் பிரியா வாரியர் பேசியபோது.... "கதையை எனக்காக மாற்றியதாக குற்றம்சாட்டுகின்றனர். கண்சிமிட்டல் பாடலுக்கு பிறகு எனக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் கதையை மாற்றியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்துவிட்டதாக நூரின் ஷெரீப் குறை கூறி உள்ளார். அவரை படத்தில் ஓரம்கட்டவில்லை. முதலில் சொன்ன கதையைத் தான் அப்படியே படமாக்கி இருந்தனர்" என்றார் காட்டமாக.