Skip to main content

தொடர் சர்ச்சை; ரிலீசான 4 நாட்களில் தியேட்டரிலிருந்து வெளியேற்றப்பட்ட படம் 

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

Omar Lulus Nalla Samayam movie withdrawn from theatres

 

மலையாளத்தில் ‘ஒரு அடார் லவ்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஓமர் லுலு, ‘நல்ல சமயம்’ என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்துள்ளார். மலையாளத்தில் உருவான இப்படத்தில் இர்ஷாத் அலி, விஜீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி ஒரு மாலில் நடைபெறவிருந்த நிலையில் சிறப்பு விருந்தினராக நடிகை ஷகிலா  அழைக்கப்பட்டிருந்தார். சில காரணங்களால் அவருக்கு அந்த மால் நிறுவனம் மறுப்பு தெரிவிக்க, உடனே படக்குழு அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தது. அப்போது இந்த நிகழ்வு சர்ச்சையானது. 

 

இதையடுத்து படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அதில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை படத்தில் பயன்படுத்தியுள்ளதாகவும், அது போதைப்பொருளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறி இயக்குநர் ஓமர் லுலு மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு ஓமர் லுலு மற்றும் தயாரிப்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த இயக்குநர், "அப்படி எந்த நோட்டீஸும் எனக்கு வரவில்லை இதற்கு முன்பு பீஷ்ம பர்வம், லூசிபர், இடுக்கி உள்ளிட்ட படங்களில் வந்துள்ளது. ஏன் என் படங்கள் மட்டும் டார்கெட் செய்யப்படுகின்றன. நாங்கள் போதைப்பொருளை ஊக்குவிக்கும் வகையில் இப்படத்தை எடுக்கவில்லை. எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டது" என விளக்கம் அளித்திருந்தார். 

 

போதைப்பொருள் காட்சி சம்பந்தமான வழக்கு பதிந்து விசாரணை நடந்து வரும் நிலையில் ‘ஏ’ சான்றிதழுடன் கடந்த மாதம் 30ஆம் தேதி நல்ல சமயம் படம் திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. இந்த வழக்கு குறித்து தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் இயக்குநர் ஓமர் லுலு. அந்தப் பதிவு ஒன்றில் கடந்த 2ஆம் தேதி "திரையரங்குகளில் நல்ல சமயம் படத்தை திரும்பப் பெறுவதாகவும், மீதமுள்ள விஷயங்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும்" அறிவித்தார்.

 

முன்னதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சமயத்தில் எக்ஸைஸ்  போலீசார் , “போதைப் பொருள் சம்பந்தப்பட்ட காட்சியை படம் நீக்காவிட்டால் படத்தை திரையிட முடியாதபடி முன்னெடுப்போம்" எனக் கூறியிருந்தனர். அதே போல் படம் வெளியான பிறகு அந்த காட்சிகள் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்துள்ள வழக்கை தொடர்ந்து புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். திரையரங்கில் ஒரு படம் வெளியாகி திரும்ப அகற்றப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

 

இது குறித்து இயக்குநர் ஓமர் லுலு, "படத்தின் பட்ஜெட்டை விட ஓடிடியில் நல்ல விலைக்கு கேட்கப்படுகிறது. கோர்ட் உத்தரவுக்கு பிறகு ஓடிடியில் ‘நல்ல சமயம்’ படம் வெளியாகும்" என தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்” - விஷால் பகிரங்க குற்றச்சாட்டு 

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vishal allegation about theatre owners for not allocating theatres for rathnam movie

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வந்தனர். மேலும் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் திருச்சி, தஞ்சாவூர் பகுதி திரையரங்குகளில் ரத்னம் படம் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விஷால் குற்றச்சாட்டு குறித்து பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், “சங்கத்தின் தலைவர் மீனாட்சி மற்றும் செயலாளர் சிதம்பரம் என்னுடைய ஃபோனை எடுக்க மறுக்கிறார்கள். என் நண்பர் சீனு சார், ரத்னம் படத்தை வடக்கு மற்றும் தெற்கு பதிகளில் வாங்கியிருக்கிறார். ஒரு திரைப்படம் வெளியாவதே பெரிய விஷயம். இந்த காலகட்டத்தில் இப்படி நீங்க பண்ணும் போது இதற்கு பெயர் கட்டப்பஞ்சாயத்து.   

இதில் முதலமைச்சர் திருச்சி கலெக்டர், எஸ்.பி, காவல் துறையினர் என அனைவருக்கும் நான் சொல்ல விருப்பப்படுவது, அவர்கள் செய்வது கட்டப்பஞ்சாயத்தை தவிர்த்து வேற எதுவும் கிடையாது. விஷாலுக்கே இந்த கதி என்றால் நாளைக்கு ஒரு புதுமுக நடிகருக்கு என்ன நடக்கும். நீங்க ஃபோன் எடுக்காமல் இருப்பது, தியேட்டர் ஒதுக்கப்படாமல் இருப்பது, அது உங்களுடைய அலட்சியம். ஆனால் அந்த அலட்சியத்தைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்” என கூறுகிறார். 

Next Story

தேர்தலை முன்னிட்டு திரையரங்குகளில் காட்சிகள் ரத்து!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
show cancelled details on april 19

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுப்பட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க, த.மா.கா உள்ளிட்ட சில கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனிக்கூட்டணியிலும் நாம் தமிழர் கட்சி தனித்தும், தேர்தலில் களம் காண்கின்றனர்.  இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்க உழியர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஏப்ரல் 19, வாக்குப் பதிவு நாளன்று திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதே சமயம் அதே நாளில் மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம் போல் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் முழு அளவில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.