Skip to main content

காலமானார் பழம்பெரும் நடிகை நளினி...

Published on 20/01/2020 | Edited on 20/01/2020

கடந்த 1969ஆம் ஆண்டு வெளியான ‘எங்க ஊர் ராஜா’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி. இதன்பின் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
 

nanjil nalini

 

 

இவர் தன்னுடைய 12 வயதில் திருநெல்வேலியிலுள்ள நாடக கம்பேனியில் சேர்ந்து நடிக்க தொடங்கியுள்ளார். சினிமாவில் ஒரு கட்டத்தில் இவருக்கு வாய்ப்புக் குறைந்தவுடன் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார். 

1978-இல் தமிழக அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்தது. இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் 74 வயதில் பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி காலமானார். இவருடைய இறப்பிற்கு, “அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு உற்றார் உறவினர் துக்கத்திலும் பங்கு கொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்” என்று இரங்கல் தெரிவித்துள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிவாஜி கணேசனின் புகழ் தரணியும் தமிழும் உள்ளவரை நிலைத்திருக்கும்” - முதல்வர் புகழாரம்

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

Shivaji Ganesan's fame will last as long as Tharani and Tamil exist says CM

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96 ஆவது பிறந்த தினம் இன்று. இதனைக் கொண்டாடும் விதமாகச் சென்னை அடையாறு பகுதியில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இன்று காலை முதல் நடிகர் சிவாஜியின் படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். அதேபோல் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களை அனல் பறக்கத் தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த நடிகர் திலகம் அவர்களின் 96 ஆவது பிறந்தநாள் இன்று. நடிப்பின் இமயமாய், தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் புகழ், தரணியும் தமிழும் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

சிவாஜி கணேசனின் 96 வது பிறந்தநாள்; மலர்தூவி முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96 ஆவது பிறந்தநாள் இன்று. இதனைக் கொண்டாடும் விதமாக சென்னை அடையாறு பகுதியில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நடிகர் சிவாஜியின் படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இதில் சிவாஜி கணேசனின் குடும்பத்தார், உறவினர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.