Skip to main content

ஜெய் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்ப்பது ஏன்? - உண்மையை உடைத்த நிதின் சத்யா

Published on 19/06/2018 | Edited on 19/06/2018
jai


ஜெய் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் 'ஜருகண்டி'. வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார். இதில் ஜெய்க்கு ஜோடியாக புதுமுகம் ரெபா மோனிகா ஜான் நடித்துள்ளார். மேலும்  ரோபோ சங்கர், டேனியல் அனி போப், இளவரசு, போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை குறித்து தயாரிப்பாளர் மற்றும் நடிகர் நிதின் சத்யா பேசுகையில்....

 

 

 

இயக்குனர் பிச்சுமணியை 'சென்னை 28' படத்தில் இருந்தே எனக்கு தெரியும். மங்காத்தா, சரோஜா என வெங்கட் பிரபு படங்களில் அவர் கோ டைரக்டராக செய்த வேலை பிடித்துப் போனது. படத்திற்கு ஏன் தெலுங்கு டைட்டில் வைத்தீர்கள் என கேட்கிறார்கள். இவரின் முதல் படதிற்கு இந்த டைட்டிலை வைத்திருந்தார். இதற்கிடையே இந்த புதிய படத்தின் கதை ரெடியானதும், படத்தின் திரைக்கதை வேகமாக நகரும் வகையில் இருக்கின்ற காரணத்தால் படத்திற்கு பொருத்தமான வேகம், ரன், ஸ்பீடு என்ற டைட்டிலை வைக்கலாம் என்று பார்த்தால் இதெல்லாம் ஏற்கனவே வந்துவிட்ட காரணத்தால் வெங்கட் பிரபு பரிந்துரையின் படி இவரின் முதல் பட டைட்டிலான 'ஜருகண்டி'யை இப்படத்திற்கு வைத்து விட்டோம். மேலும் படத்தை உண்மையாகவே சரியாக 46 நாட்களில் முடித்துவிட்டோம். ஜெய் உட்பட அனைவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஜெய் பொதுவாக எந்த பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொல்வதில்லை என்ற முடிவில் இருக்கிறார். அதனால் நான் அவரை பிரோமஷன் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை. மேலும் அவருக்கு பத்திரிக்கையாளர்களை கண்டால் ஒருவித பயம் வந்துவிடுகிறது. அது என்ன, ஏன் என்று எனக்கும் தெரியவில்லை. படத்தை விரைவில் சென்சாருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். மேலும் சிங்கம் 3 படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருக்கிறேன் என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

ரஜினி,கமல் ஜீரோ;சிம்புதான் ரியல் சூப்பர் ஸ்டார்- சீமான்!!

Published on 06/01/2019 | Edited on 06/01/2019

சென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த  இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,

 

SEEMAN

 

உண்மையிலேயே ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தான் ஆண் மகன். ரஜினிகாந்த், கமல் எல்லாம் பேசக்கூடாது. அவர்கள் ஹீரோக்கள் அல்ல ஜீரோக்கள். என் தம்பி ஒருவர் இருக்கிறார் விஜய். சர்க்கார் படத்தில் பேசினேன் என்றால் ஆமாம் பேசினேன் என்று சொல்லவேண்டியதுதானே. உண்மையிலேயே நீ என் தம்பியா? எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்படுவது. என் படத்தில் நடிக்கமாட்டாரு ஆனால் நான் பேசுவதையெல்லாம் பேசி நடிப்பாரு என் தம்பி விஜய். என்ன செய்வது என் தம்பியாக போய்விட்டார்.

 

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமே என் தம்பி சிலம்பரசன்தான். மூன்று படம் சிம்புவை வைத்து எடுக்கப்போவதாக முடிவு செய்தாச்சு. அதோட பலபேர் நெஞ்சு வெடிக்க போகுது.  தனக்கு நேர்மையானவன், துணிவானவன், அச்சப்படாதவன் அவன்தான் ரியல் சூப்பர் ஸ்டார். கொளுத்தி எடுக்குறோம் அண்ணனும் தம்பியும் சேர்ந்து.

 

எல்லார்கிட்டையும் கதையை சொன்னேன் எல்லாரும் பயந்துட்டாங்க ஆனா நான் நடிக்கிறேன் அண்ணா என்று என் தம்பி சிம்பு மட்டும்தான் சொன்னார். ஏன் சொன்னார் அவர்தான் தமிழன்.  அண்ணாவுக்கு எம்ஜிஆர் அண்ணனுக்கு நீதான்'னு சொல்லிட்டேன்.

என்றார் நகைச்சுவையாக.