கொரோனா அச்சுறுத்தல் உலகமெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கு நடிகர் நிதின் மற்றும் ஷாலினிக்கும் வரும் ஏப்ரல் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் துபாயில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ஆனால் கொரோனா தொற்று காரணமாகத் துபாய் திருமண ஏற்பாடுகளை நிதின் ரத்து செய்துவிட்டார். இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தன் வீட்டிலேயே திருமணத்தை எளிமையாக நடத்த தற்போது முடிவு செய்துள்ளார். முன்னதாக இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் ஐதராபாத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் நிதின் தெலுங்கில் ‘ஜெயம்’ படம் மூலம் அறிமுகமாகி பின்னர் ராம்கோபால் வர்மா இயக்கிய ‘அக்யுத்’ என்ற ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார். மேலும் சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறார்.
Show comments