சமீபத்தில் வெளியான 'கலகலப்பு 2' வை அடுத்து நடிகை நிக்கி கல்ராணி தற்போது ஜீவாவுடன் 'கீ', மற்றும் பிரபுதேவாவுடன் 'சார்லி சாப்ளின் 2' வில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தன் பெரும்பாலான தோல்வி படங்கள் குறித்து மனம் திறந்து நிக்கி பேசும்போது... "வெற்றி பெறும் என்று நம்பியே நூறு சதவீத உழைப்பைக் கொடுக்கிறோம். அதற்கு சரியான பலன் இல்லாதபோது சோகமாகத்தான் இருக்கும். நாடு முழுக்க வருடத்துக்கு ஐநூறுக்கு மேற்பட்ட படங்கள் வருகிறது. அதில் நமது படமும் ஒன்று. நல்ல இடத்தை பிடிக்கவேண்டும் என்று தான் ஓடுகிறோம். ஆனால் சமயத்தில் அது தவறிவிடும். அதற்காக மனதை தளர விடுவதில்லை. அடுத்த படம் நன்றாக அமையும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் பணியைத் தொடங்கிடுவேன்" என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார்.
அதற்காக மனதை தளர விட மாட்டேன் - நிக்கி கல்ராணி
சார்ந்த செய்திகள்
Next Story
சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story