“ஆதார் அட்டை இல்லாம ஆட்சி செய்ய வந்துட்டானே”- அரசியல் பேசும்‘என்ஜிகே’ சிங்கிள்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து திரைக்கு வர இருக்கும் படம் ‘என்ஜிகே’. சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகைகளும் இதில் நடித்துள்ளனர். எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இந்த படம் கடந்த இரண்டு வருடங்களாக பல தடைகளுக்கு பின்னர் மே 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. செல்வாவின் படத்தில் பல வருடங்கள் கழித்து யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

surya

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

என்ஜிகே படத்தின் டீஸர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இன்று ‘தண்டல்காரன்’என்று ஒரு பாடலை வெளியிட இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு படக்குழு அறிவித்திருந்தது. நேற்று சின்னதாக வீடியோ புரோமோ ஒன்றையும் வெளியிட்டது படக்குழு.

செல்வராகவனின் ஆஸ்தான பாடலாசிரியாராக இருந்தவர் நா. முத்து குமார். ஆனால், அவரது மறைவிற்குபின் செல்வா யாரை வைத்து பாடல்களை எழுதுவார் என்று பலரும் சிந்தித்து இருப்பார்கள். இன்று வெளியாகி தண்டல்காரன் பாடலை பாடலாசிரியர் கபிலன் எழுத, ரஞ்சித் பாடியிருக்கிறார். வழக்கம் போல யுவன் - செல்வா கூட்டணியில் இருக்கும் ஒரு புதுமை இந்த பாடலிலும் தெரிகிறது. பாடல் வரிகள் தற்போதைய அரசியலை சொல்வது போன்றே இருக்கிறது.

மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வேறு பாடல்கள், படத்தின் ட்ரைலர் வெளியிடு எப்போது என்பதை படக்குழு விரைவில் அறிவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

NGK selvaraghavan Surya
இதையும் படியுங்கள்
Subscribe