Skip to main content

ரகுல் ப்ரீத் சிங்கிடம் மன்னிப்பு கேளுங்கள்.... மூன்று செய்தி சேனல்களுக்கு உத்தரவு!

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

Rakul Preet Singh

 

ரகுல் ப்ரீத் சிங்கிடம் மன்னிப்பு கேட்டு, அந்தச் செய்தியை தங்கள் சேனலில் ஒளிபரப்ப வேண்டும் என மூன்று தனியார் செய்தி சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்புத் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி தற்கொலை செய்து கொண்டது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பல மர்மங்கள் இருப்பதால், இது தொடர்பான வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டது. சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு அவரது காதலியான ரியா சக்கரபோர்த்தி போதைப்பொருள் வழங்கினார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அவர் சிபிஐ-யின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். அதன் பிறகு, பாலிவுட் சினிமா உலகில் போதைப்பொருள் விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்தது.

 

இதனையடுத்து, போதை மருந்து தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணையின் போது, நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் பெயரை ரியா கூறியதாக தகவல் வெளியாகின. இத்தகவலை, சில முன்னணி செய்தி நிறுவனங்களும் செய்தியாக வெளியிட்டன. இதனை எதிர்த்து ரகுல் ப்ரீத் சிங் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

ரகுல் ப்ரீத் சிங்கின் பெயரை தான் பயன்படுத்தவில்லை என்று ரியா கூறியதையடுத்து, ரகுல் ப்ரீத் சிங்கிடம் மன்னிப்பு கேட்டு, அந்த செய்தியை தங்கள் சேனலிலேயே வெளியிட வேண்டும் என அச்செய்தியை வெளியிட்ட மூன்று தனியார் செய்தி சேனல்களுக்கு, செய்தி ஒளிபரப்புத் தர நிர்ணய ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் சில தனியார் சேனல்களுக்கு, இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்தியை இணையதளம் மற்றும் சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
pm modi wishes rakul preet singh

தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். கடைசியாக அயலான் படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தமிழைத் தாண்டி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வந்த இவர், இந்தி தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜாக்கி பாக்னானி என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். 

இருவரின் காதலுக்கும் அவர்களது வீட்டில் சம்மதம் தெரிவிக்க, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணம் காலையில் சீக்கிய முறைப்படியும் மாலையில் இந்து முறைப்படியும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நிகழ்வில் இருவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்‌ஷய் குமார், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட சில பாலிவுட் திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில் ரகுல் ப்ரீத் சிங், பிரதமர் மோடி தங்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் அனுப்பிய வாழ்த்து கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் வாழ்த்து கடிதத்தில், “நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் வாழ்நாள் முழுவதும் வாழத் தொடங்கும் ஜாக்கியும் ரகுலுக்கும் எனது மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள். இனி வரும் வருடங்கள் தம்பதியர் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகும். தம்பதியரின் மனம் மற்றும் செயல்கள் ஒன்றாக இருக்கட்டும். எப்பொழுதும் அருகருகே இருந்துகொண்டு, தங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் நனவாக்கும் முயற்சியில் ஒருவரையொருவர் கைகோர்த்து, சிந்தனையோடும் அன்போடும் பொறுப்புகளை ஏற்று, வாழ்க்கைப் பயணத்தில் சரியான தம்பதிகளாக இருக்கட்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

‘அன்பே... பேரன்பே...’ - காதலரைக் கரம் பிடித்த ரகுல் ப்ரீத் சிங்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024

தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். கடைசியாக அயலான் படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தமிழைத் தாண்டி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வந்த இவர், இந்தி தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜாக்கி பாக்னானி என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரின் காதலுக்கும் அவர்களது வீட்டில் சம்மதம் தெரிவிக்க, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணம் காலையில் சீக்கிய முறைப்படியும் மாலையில் இந்து முறைப்படியும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நிகழ்வில் இருவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்‌ஷய் குமார், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட சில பாலிவுட் திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.