Skip to main content

பிரபல தொடரில் நடிகை குறித்து தரக்குறைவான வசனம் - நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய ரசிகர்

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

Netflix Gets Legal Notice Over Madhuri Dixit dialogue in The Big Bang Theory

 

நெட் ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் பிரபல சீரிஸ்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வரும் தொடர் 'தி பிக் பேங் தியரி'. மொத்தம் 12 சீசன்களை கொண்ட இந்த தொடர் செப்டம்பர் 24, 2007 முதல் மே 16, 2019 வரை வெளியிடப்பட்டது. இந்த தொடரை மார்க் செண்ட்ரோவ்ஸ்கி இயக்க ஜானி, ஜிம் பார்சன்ஸ், கேலி குவோகோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

 

இந்த தொடரின் இரண்டாவது சீசனில் முதல் எபிசோடில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனை மாதுரி தீட்சித்துடன் ஒப்பிட்டு பேசி ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அதில் நடிகை மாதுரி தீட்சித்தை தரக்குறைவாக பேசியதாக தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக அரசியல் ஆய்வாளர் மிதுன் விஜய் குமார், அந்த குறிப்பிட்ட எபிசோடை நீக்குமாறு நெட் ஃப்லிக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

 

அவர் அனுப்பியுள்ள நோட்டீசில், "தி பிக் பேங் தியரி தொடரில் நடிகை மாதுரி தீட்சித்தை பாலியல் தொழில் செய்யும் நடிகை என தரைகுறைவான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். இது இந்திய கலாச்சாரம் மற்றும் பெண்களை மிகவும் இழிவுபடுத்தும் மற்றும் புண்படுத்தும் செயலாகும். இந்த வசனம் பாலியல் மற்றும் பெண் வெறுப்புணர்வை ஊக்குவிக்கிறது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையெனில் பாலின பாகுபாடு மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவிப்பதற்காக உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த மிதுன் விஜய் குமார் தான் ஒரு மாதுரி தீட்சித் ரசிகரின் என குறிப்பிட்டுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

Next Story

புடவைகளை விற்று உதவி செய்த பிரபல நடிகை

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
navya nair helped charity people with his saree sold

மலையாள திரையுலகில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை நவ்யா நாயர். மேலும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான 'அழகிய தீயே', சேரனின் 'மாயக்கண்ணாடி', முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய 'பாசக்கிளிகள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இப்போது மலையாளத்தில் மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்த நிலையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில், தான் ஒரு முறை அணிந்த மற்றும் புதிதாக வாங்கி அணிய முடியாத புடவைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதாக அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் கைத்தறி, காஞ்சிபுரம், பனாரஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான புடைவைகள் இருப்பதாகவும் நியாயமான விலையில் அவை கிடைக்குமெனவும் கூறியிருந்தார். இது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர். 

navya nair helped charity people with his saree sold

இதையடுத்து நவ்யா நாயர் விற்பனையை தொடங்கினார். அதன் மூலம் கிடைத்த லாபத்தை கேரள பத்தனாபுரத்தில் உள்ள காந்திபவனுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். அங்கு வசிப்பவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் பயனுள்ள பொருட்களை வாங்கிக் கொடுத்து அருகில் இருக்கும் காந்தி பவன் சிறப்பு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையையும் கொடுத்துள்ளார். இவரது செயல் தற்போது பாராட்டை பெற்று வருகிறது.