‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் மாதம் முடிக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

Advertisment

nerkonda parvai

இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் நேற்று மாலை திடீரென படத்தில் ஒரு பாடல் ஒன்று வெளியிட இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார். இன்று காலை 7:45 மணிக்கு வானில் இருள் என்கிற அப்பாடல் வெளியானது.

Advertisment

இப்படம் வருகிற ஆக்ஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முன்கூட்டியே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். படக்குழு நெறுங்கிய வட்டாரத்தில் பேசியபோது நமக்கு கிடைத்த தகவலின்படி படத்தை ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இறுதிக்கட்ட பணிகளை முடிக்க வேகமாக செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி ஐந்து மொழிகளில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த சாஹோ படம் வெளியாகிறது. அதன் காரணமாகதான் நேர்கொண்ட பார்வை படம் முன்கூட்டியே வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment