Skip to main content

மூன்று ஹீரோயின் மற்றும் பாம்பு பிடியில் ஜெய்...! நீயா2 கதை இதுதான் 

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

சர்வாவும் மலரும் உயிருக்கு உயிராய் காதலிக்கிறார்கள். ஆடல் பாடலுமாக சுற்றித்திரியும் மலருக்கு தலையில் இடிவிழுந்தது போல் செய்தி அறிகிறாள். தனது காதலனுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்கும் செய்தி கேட்டுஅதிர்ச்சியாயிருக்கிறாள். பழைய காதலை மறக்க முடியாமல் காதலன் சர்வாவை தேடி அலைகிறாள். பழையநினைவுகளோடு அவன் இருக்கும் இடம் தேடி கண்டுபிடித்து அவன் ரூமிற்கு செல்கிறாள்.

 

neeya2

 

அவன் இல்லாத அந்த ரூமையையே ஏக்கமாய் பார்த்து கொண்டு இருக்க, சர்வாவும், அவன் மனைவி திவ்யாவும் ரூமிற்குள் வர, மலர் ஒளிந்து கொள்கிறாள். இருவரும் படுக்கையில் கட்டி பிடித்து புரள... மலர் கோபமடைகிறாள். கோபமடைந்த மலர் அவர்களை என்ன செய்கிறாள் என்பதே அடுத்த காட்சியின் தொடர். இப்படி  ஒரு காட்சியில், சர்வாவாக ஜெய், காதலி மலராக ராய்லட்சுமி, மனைவி திவ்யாவாக கேத்தரின் தெரேசா நடித்த காட்சி சாலக்குடியில் படமாக்கப்பட்டது. இவர்கள் மூவருடன் தொடர்புடைய நான்காவது ஆளாக வரலட்சுமி நடித்திருக்கிறார்.

 

neeya2

 

அதுவே படத்தின் சஸ்பென்ஸ் கதையாக அமைந்து இருக்கிறார்கள். விதி வலியது என்பது போல், காலகாலமாய் காத்திருந்த வரலட்சுமியின் காதல் ஜெய்த்ததா?  அவனை எப்படியும் அடைந்தே தீருவேன் என்ற ராய்லட்சுமியின் காதல் ஜெய்த்ததா?  இவர்களுடன் போராடும் கேத்தரின் தெரசா ஜெயித்தாரா?  இதற்காக ஜெய் செய்த தியாகம் என்ன என்பதே நீயா2.  ராஜநாகம் ஒன்று முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது.  எல்.சுரேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பேய் படங்களுக்கு நிறைய வாய்ப்பு வந்தது. ஆனால் இந்த படம் தான் வேணும்' - ராய் லட்சுமி 

Published on 11/03/2019 | Edited on 11/03/2019
raai lakshmi

 

 

நடிகர் ஜெய்யுடன் ராய் லட்சுமி, கேத்தரின் தெரசா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து நடித்த 'நீயா 2' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகை ராய் லட்சுமி இப்படம் குறித்து பேசும்போது... "இரண்டு வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கிறேன். சுரேஷ் கதை கூறினார். 3 மணி நேரம் கதை கேட்ட பிறகு இது பெரிய படமாக இருப்பது போல் உள்ளது. அதை கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பொறுமையாக ஆலோசித்து முடிவெடுத்தேன். பாம்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம். பேய் படங்களுக்கு நிறைய வாய்ப்பு வந்தது. ஆனால் இப்படத்தின் காதல், திரில்லர் அதனுடன் பாம்பு கதையம் இருப்பதால் இதில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி" என்றார்.

 

 

Next Story

நீயாவை தொடர்ந்து 'நீயா 2வில் நடித்த 22அடி நீளமுள்ள பாம்பு !

Published on 23/11/2018 | Edited on 23/11/2018
varu sarath

 

 

 

ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீன் தெரேசா நடிக்கும் நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான 'ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்'  வாங்கியுள்ளது. 1979ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'நீயா' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள  'நீயா 2' படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக இயக்கியுள்ளார் இயக்குநர் எல்.சுரேஷ். மேலும் ஷபீர் இசையில் ஏற்கனவே 'தொலையுறேன்' பாடல் வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்ற நிலையில், நேற்று 'இன்னொரு ரவுண்டு' என்ற பாடல் வெளியியாகிவுள்ளது.  'நீயா' படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் திகிலில் ஆழ்த்தியது பாம்பு. அதுபோலவே, 'நீயா 2'விலும், 22 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நடித்துள்ளது. பாண்டிச்சேரி, தலக்கோணம், சென்னை, மதுரை மற்றும் சாலக்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்தை டிசம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.