Skip to main content

தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா 

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
nazriya

 

 

 

நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின் ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை நஸ்ரியா பின்னர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார். பின்னர் மீண்டும் பிரித்விராஜுடன் நடித்த 'கூடே' படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்த நஸ்ரியா அடுத்ததாக மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரப் போவதாகவும், இதுகுறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று விரைவில் வரும் என்றும் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழில் நஸ்ரியா ரீ என்ட்ரி

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

nazriya tamil latest update

 

நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நஸ்ரியா, ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் என அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். அதன் பின்னர் பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்து சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். 

 

பின்பு கூடே என்ற மலையாளப்படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து மலையாளத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அவர் கடந்த ஆண்டு நானி நடிப்பில் வெளியான 'அடடே சுந்தரா' மூலம் தெலுங்கில் அறிமுகமானார். ஆனால் ரீ என்ட்ரிக்குப் பிறகு தமிழில் எந்தப் படமும் கமிட்டாகாமல் இருந்தார். 

 

இந்நிலையில் தமிழில் உருவாகும் ஒரு வெப் தொடரில் நடிக்கக் கமிட்டாகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பெண்களை மையப்படுத்தி உருவாகும் கதை எனவும் அதனால் முதன்மைக் கதாபாத்திரத்தில் நஸ்ரியா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சூர்யா பிரதாப் என்பவர் இயக்கவுள்ளதாகச் சொல்லப்படும் இத்தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

 

 

 

Next Story

“இனி என் வாழ்நாளில் இதை செய்யவே மாட்டேன்” - கடுப்பான நஸ்ரியா

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

nazriya never travel Thai Airways

 

நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நஸ்ரியா ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் என அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமனார். அதன் பின்னர் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகிய நஸ்ரியா, தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். 

 

ad

 

இந்நிலையில் நடிகர் நஸ்ரியா தாய்லாந்து பயணத்தின் போது தாய் ஏர்வேஸ் விமானத்தில் தனக்கு நடந்த ஒரு மோசமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தாய் ஏர்வேஸின் சேவை மிக மோசமாக இருந்தது. விமானத்தில் எனது பைகள் காணாமல் போனதால் உதவி கேட்டு பணியாளர்களை அழைக்கும் போது அவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இனிமேல் என் வாழ்க்கையில் அந்த விமானத்தில் பயணம் செய்யமாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.