Published on 03/01/2019 | Edited on 03/01/2019
ஆண்டிபட்டியில் ஒரு இளைஞர்கள் கூட்டம் நயன்தாரா நற்பணி மன்றம் என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது. அந்த ஊருக்கு நயன்தாரா நற்பணி மன்றம் மூலம் பல நல்ல உதவிகள் கிடைக்கின்றன .ஒரு கட்டத்தில் நயன்தாரா அவ்வூருக்கு வருவதாக இருந்து, சில இடையூறுகலால் அவர் அந்த ஊருக்கு நயன்தாரா வந்தாரா இல்லையா என்பதே 'நயன்தாரா நற்பணி மன்றம்' படத்தின் கதை. இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கிளி ராமசந்திரன், வெங்கட ராவ், முத்துக்காளை, நெல்லை சிவா, பிளாக் குமார் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இடம் பெறுகிறார்கள். நயன்தாரா இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று கொண்டு இருக்கிறது. சென்னை, ஆண்டிபட்டி மற்றும் தமிழ்நாட்டின் பல சுற்று வட்டார பகுதிகளில் ஜனவரி 9 முதல் படப்பிடிப்பு நடைபெறுகிறது. படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்குக்கிறார் தேவகோட்டை ஸ்ரீ.