Skip to main content

பிரேமம் இயக்குநருடன் கைகோர்க்கும் நயன்தாரா... முழுவீச்சில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பு!

Published on 14/09/2021 | Edited on 14/09/2021

 

Nayanthara

 

நேரம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய பிரேமம் படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், அடுத்த சில ஆண்டுகள் எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்து வந்த அல்போன்ஸ் புத்திரன், ஃபகத் பாசிலை நாயகனாக வைத்து பாட்டு என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளதாகக் கடந்த ஆண்டு அறிவித்தார். இப்படத்தில் ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருந்தார். கரோனா பரவல் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் திட்டமிட்டபடி இப்படத்தின் பணிகளைத் தொடங்க முடியாத சூழல் நிலவியதையடுத்து, பாட்டு படத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

 

இதனையடுத்து, அல்போன்ஸ் புத்திரன் நடிகர் பிரித்வி ராஜை நாயகனாக வைத்து படம் இயக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. கோல்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், பிரித்வி ராஜிற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இப்படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா கலந்துகொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜெய் ஸ்ரீராம்...” - வருத்தம் தெரிவித்த நயன்தாரா  

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Nayanthara expresses regret over Annapoorani film issue

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான அன்னபூரணி படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அன்னபூரணி படம் வெளியான நிலையில், இப்படத்தில் கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக வரும் ஒரு காட்சியை குறிப்பிட்டு, இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாக மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

அதனடிப்படையில் நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு இப்படத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் படத்தை தடை செய்யவேண்டும் எனப் பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்னப்பூரணி படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் நடிகை நயன்தாரா இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெய் ஸ்ரீராம் என்று குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ எனது நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். 

'அன்னபூரணி' திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே 'அன்னபூரணி' திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம். அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

அல்போன்ஸ்புத்திரன் எடுத்த அதிரடி முடிவு

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
alphonse puthren shut down social media

பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், கோல்டு படத்தை தொடர்ந்து 'கிஃப்ட்' என்ற தலைப்பில் இளையராஜா இசையில் ஒரு படம் இயக்கி வந்தார். டான்ஸ் மாஸ்டர் சாண்டி இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ராகுல் தயாரித்து வந்த இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது. ஆனால் சமீபத்தில் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதாக தெரிவித்து சினிமா தியேட்டர் கரியரை நிறுத்துவதாக தெரிவித்தார். இருப்பினும் குறும்படங்கள், ஆல்பம் பாடல்கள் என பெரும்பாலும் ஓடிடிக்கு ஏற்றவாறு இயக்குவதாக கூறியிருந்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

இதனிடையே தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ச்சியாக நிறைய பதிவுகளை பகிர்ந்து வருவார். அதில் சில பதிவுகள் பலரது கவனத்தை பெற்று வைரலானது. இந்த நிலையில் இனிமேல் சமூக வலைதளங்களில் எது குறித்தும் பதிவிட போவதில்லை என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “நான் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது, எனது அம்மா, அப்பா மற்றும் சகோதரிகளுக்குப் பிடிக்கவில்லை. சில உறவினர்கள் அவர்களைப் பயமுறுத்துகிறார்கள். அதனால் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பதிவிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளேன். நான் அமைதியாக இருந்தால் அனைவருக்கும் நிம்மதி கிடைக்கும் என்கிறார்கள். அதனால் அப்படியே ஆகட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.