பிகில் படத்திற்கு பிறகு 'தர்பார்' படத்தில் ரஜினியுடன் நடித்து வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் கசப்பான பட அனுபவம் குறித்து பேசியபோது...
''என் சினிமா வாழ்க்கையில் கஜினி படத்தில் நடித்ததைதான் நான் செய்த பெரிய தவறாக நினைக்கிறேன். இயக்குனர்என்னிடம் கஜினி கதை சொல்லும்போது அது வேறு விதமாக இருந்ததால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் படப்பிடிப்பில் என் கதாபாத்திரத்தை வேறு விதமாக மாற்றி எடுத்து, என்னை மோசடி செய்துவிட்டனர். இது எனக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்தது. அதன்பிறகு எந்த படத்தை ஒப்புக்கொண்டாலும் கவனமாக கதை கேட்டு ஒப்புக்கொள்ள ஆரம்பித்தேன்'' என்றார்.