மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கர்ணன்' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்க, யோகி பாபு, பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நடரஜான், லால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் லீக்காகி வைரலாகின.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இந்தப் படம் 1991ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற சாதி கலவரம் ஒன்றை மையமாக வைத்துதான் உருவாகிறது என்று கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை இயக்குனர் மாரி செல்வரஜ் மீது குற்றச்சாட்டு வைத்து அறிக்கை வெளியிட்டது. மேலும் அதில் மாரிசெல்வராஜை கைது செய்ய வேண்டும், படத்தை எடுக்கதடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. இதற்கிடையே இந்தப் படத்தின் 90 சதவீத ஷூட்டிங் முடிக்கப்பட்டுவிட்ட நிலையில் கரோனா காரணமாக மீதம் உள்ள படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நடரஜான் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''மாரி செல்வராஜ்.. ஆகச் சிறந்த இயக்குனர்.... படம் ரிலீஸ் ஆகட்டும் கொண்டாடுவீங்க...'' எனப் பதிவிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்டுள்ளார்.