Skip to main content

“ஸ்போர்ட்ஸ் அரசியல் பேசியிருக்கிறார் ஆதி”- நட்பே துணை மக்கள் கருத்து

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

‘மீசையை முறுக்கு’ படத்தை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படம் ‘நட்பே துணை’. இந்த படத்தில் யூ-ட்யூப் பிரபலம் விஜய் நடித்திருக்கிறார். மீசையை முறுக்கு படத்தில் நடித்த விக்னேஷ் காந்த், ஷாரா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு படத்தை இயக்கியுள்ளார். கரு.பழனியப்பன் முதன் முறையாக வில்லனாக இப்படத்தில் நடித்திருக்கிறார். இன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாகியுள்ளது. 
 

public

 

காலை ஐந்து மணிக்கு போடப்பட்ட சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு வந்த ரசிகர்களில் பலரும் இந்த படத்தை பாராட்டியே பேசியிருந்தனர்.


முதலில் பேசிய ஒருவர்“ ஹிப்ஹாப் ஆதி செம, நல்ல நடிச்சிருக்கார்”என்றார்.
 

 இரண்டாவதாக பேசியவர் “நல்ல ஒரு ஸ்போர்ட்ஸ் படம் எடுத்திருக்காங்க”என்றார். 
 

இவர்கள் இருவரும் பேசியதற்கு புதிதாக வேறு ஒரு விஷயத்தை தெரிவித்தார்,“படத்தில ஏன் ஓட்டுப்போடனும் எல்லாம் சொல்லியிருக்காங்க”என்றார்.
 

“படம் நல்ல மாஸா இருந்தது. நல்ல கமெர்ஷியல் எலிமெண்ட்ஸ் எல்லாம் வச்சு பக்கா பேக்கேஜா இருந்தது. படம் ரொம்ப ஜாலியா இருந்தது.” என்று ஒரு இளைஞர் கூறினார்.
 

“எப்படி ஒரு ஹாக்கி படம் எடுக்கப்போறாங்கனு எதிர்பார்த்தோம், நல்லவே ரெஸ்பான்ஸ் கிடைச்சது” என்று தெரிவித்தார்.
 

“படத்தில ஒரு ஒன்லைன் சொல்லியிருக்காங்க கூட்டமா இருக்கிறது பெருசு இல்ல, நம்மெல்லாம் ஒற்றுமையா இருக்கிறதுதான் பெருசுனு சொல்லியிருக்காங்க அதுக்காக பார்க்க வரலாம். மீசைய முறுக்கு கம்பேர் பண்ணும்போது இது ஓக்கேதான்” என்று ஆதியின் பழைய படத்தையும் இதையும் ஒப்பிட்டு பேசியிருந்தார்.
 

“வெளியூர் கட்சிகள உள்ளவிட மாட்ட்டோம். எங்கள் தன்மானத்த மீட்டெடுப்போம் அதை வர தேர்தல்ல பாப்பீங்க. இது அரசியல் பேசுற ஸ்போர்ட்ஸ் படம்” என்று இறுதியாக ஒருவர் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழில் ஒலித்த குரல் - மகிழ்ச்சியில் ஹிப் ஹாப் ஆதி

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

hiphop adhi about his travelling flight announced information in tamil

 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி, தொடர்ந்து மீசைய முறுக்கு, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானார். கடைசியாக இவர் நடிப்பில் 'வீரன்' படம் வெளியானது. இப்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் 'பி.டி சார்' படத்தில் நடிக்கிறார். 

 

இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் விமானத்தில் பயணம் மேற்கொண்ட போது தமிழில் ஒலித்த குரலை கண்டு மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில்... என குரல் ஒலிக்க ஆரம்பித்ததும், அட தமிழ்ல அறிவிப்பு பண்றாங்களேப்பா என ஒரு சின்ன சந்தோஷம். 'வலப்புறம் 2000 ஆண்டுகள் பழைய பொறியியல் அதிசயமான சோழன் கட்டிய கல்லணையைக் காணலாம். இடப்புறம் கொள்ளிடத்தைக் காணலாம்...' என ஒவ்வொரு அறிவிப்பிலும் பெருமையோடு தமிழில் அறிவித்த அந்தக் குரலின் சொந்தக்காரனை காணவேண்டும் என ஆசை. 

 

சாந்தமான முகத்தோடு வந்த பைலட் பிரியன் விக்னேஷிடம் 'அருமை நண்பா' என மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். இதில் சிறப்பு என்னவெனில், பிரியன் ஆங்கிலத்தில் அறிவிக்கும்போது அவர் சொல்லச் சொல்ல, இரண்டு வெளிநாட்டு பயணிகள் எட்டி ஆச்சரியத்தோடு கல்லணையை பார்க்க ஜன்னல் அருகே முண்டியடித்தனர்" என குறிப்பிட்டு அது சம்பந்தமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

 

 


 

Next Story

"கவர்னருக்கு மாற்றில்லை" - டாக்டர் பட்டம் வாங்கிய ஆதி

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

hip hop aadhi about governer rn ravi

 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஆதி. தொடர்ந்து மீசைய முறுக்கு, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக இவர் நடிப்பில் 'வீரன்' படம் வெளியானது. இப்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் 'பி.டி சார்' படத்தில் நடித்து வருகிறார். 

 

கடந்த மார்ச் அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தான் டாக்டர் பட்டம் முடித்துள்ளதாக தெரிவித்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் பி.ஹெச்டி முடித்துள்ளேன். ஆனால் படிச்சு வாங்கின டாக்டர் பட்டம். அதனால் டாக்டர் ஹிப் ஹாப் தமிழா என்றே அழைக்கலாம். இசைத் துறையில் (Music Entrepreneurship) முடித்துள்ளேன். எனக்கு தெரிந்து இந்தியாவில் இந்த துறையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளது இதுதான் முதல் முறை. இதை முடிக்க கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்டது" என்றார். 

 

இந்நிலையில் கோவை பாரதியார் அரசுப் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி கையில் இசைத் துறையில் (Music Entrepreneurship) என்ற பிரிவில் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார் ஆதி. பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "5 வருஷம் ஆராய்ச்சி செய்தேன். கடந்த வருஷம் முடித்தேன். இந்த வருஷம் வாங்கிவிட்டேன். நடித்துக்கொண்டே ஆராய்ச்சி செய்ததால் கொஞ்சம் கடினமாக இருந்தது. முனைவர் பட்டம் கவர்னர் கையில் தான் வாங்க வேண்டும். வேறெதுவும் மாற்றில்லை. சந்திரயான் 3 வெற்றி இந்தியாவுக்கே பெருமை" என்றார்.